ஆப்நகரம்

திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரத்தின் உச்சியில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

TNN 3 Sep 2016, 4:31 pm
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரத்தின் உச்சியில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil cobra staged a dance show in tiruvannamalai temple
திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு!


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன.

தற்சமயம், கோவில் கோபுரங்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று மாலை வடக்கு திசையில் உள்ள அம்மனிஅம்மன் கோபுரத்தில் பணியாளர்கள் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்போது அந்த கோபுரத்தின் 8வது உச்சிப் பகுதியில் ஒரு நல்லபாம்பு படம் எடுத்து ஆடியதை பார்த்து, அவர்கள் திடுக்கிட்டனர்.

உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தின் மேலே ஏறி பாம்பை லாவகமாக பிடித்து, கீழே கொண்டு வந்தனர். மேலும், கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களிலும் பாம்புகள் உள்ளனவா என சோதனை செய்தனர். இதன்பின், அந்த நல்ல பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்