ஆப்நகரம்

கள்ளழகருக்கு தண்ணீரை பீச்சியடித்து பக்தர்கள் வரவேற்பு..!

வைகை ஆற்றில் இறங்கிய பின்னர் மண்டகப்படி திரும்பும் அழகரை தண்ணீரை பீச்சியடித்து பக்தர்கள் வரவேற்றனர்.

TNN 10 May 2017, 10:37 am
வைகை ஆற்றில் இறங்கிய பின்னர் மண்டகப்படி திரும்பும் அழகரை தண்ணீரை பீச்சியடித்து பக்தர்கள் வரவேற்றனர்.
Samayam Tamil devotees welcomes god alagar with water cannon
கள்ளழகருக்கு தண்ணீரை பீச்சியடித்து பக்தர்கள் வரவேற்பு..!


பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இன்று காலை 6.20 மணியளவில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில், பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து அழகர் ராமராயர் மண்டகப்படிக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக வைகை ஆற்றிலிருந்து ராமராயர் மண்டபத்திற்கு அழகர் செல்லும் வழியில், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக அழகர் மீது தண்ணீரை பீச்சியடித்தனர். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கள்ளழகர் ராமராயர் மண்டகப்படியை அடைந்தார்.அங்கு இன்று மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் கள்ளழகர், பின்னர் இன்று இரவு வண்டியூர் அனுமார் கோவிலில் எழுந்தருள உள்ளார்.

பின்னர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், தசாவதாரம் ஆகிய நிகழ்வுகளுக்கு பிறகு வரும் 13-ஆம் தேதி அழகர்கோவிலுக்கு கள்ளழகர் திரும்ப உள்ளார்.

Devotees welcomes God Alagar with water Cannon

அடுத்த செய்தி

டிரெண்டிங்