ஆப்நகரம்

பராமரிப்பு பணிக்காக பழநி கோவில் ரோப் கார் சேவை 4ம் தேதி நிறுத்தம்!

பராமரிப்பு பணிக்காக பழநி கோவில் ரோப் கார் சேவை 4ம் தேதி நிறுத்தப்படுகிறது.

Samayam Tamil 2 Jul 2018, 6:07 pm
பராமரிப்பு பணிக்காக பழநி கோவில் ரோப் கார் சேவை 4ம் தேதி நிறுத்தப்படுகிறது.
Samayam Tamil palani vinch


பழநி முருகன் கோயிலுக்கு எட்டு நிமிடத்தில் செல்லும் வகையில், பக்தர்களின் வசதிக்காக மூன்று வின்ச் கேபிள் கார்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள ரோப் கார் சேவை, பராமரிப்பு பணிக்காக 4ம் தேதி நிறுத்தி வைக்கப்படுகிறது. பராமரிப்பு பணியின் போது, அதன் கம்பி வடம் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும், பெட்டிகள், உருளை, இன்ஜீன் உள்ளிட்ட பாகங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு மீண்டும் வின்ச் சேவை இயக்கப்படும் என்று பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்