ஆப்நகரம்

ஊத்துக்காடு கிருஷ்ணர் கோயிலில் 25ம் தேதி உறியடி உத்ஸவ விழா!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஊத்துக்காட்டில் உள்ள ஸ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில், வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம் நடைபெறுகிறுகிறது.

TNN 20 Aug 2016, 6:31 pm
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஊத்துக்காட்டில் உள்ள ஸ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில், வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம் நடைபெறுகிறுகிறது.
Samayam Tamil festival starts from 25th in uttukadu krishna temple
ஊத்துக்காடு கிருஷ்ணர் கோயிலில் 25ம் தேதி உறியடி உத்ஸவ விழா!


ஊத்துகாட்டில் வாழ்ந்த வேங்கடகவிக்கு பகவான் கிருஷ்ணர், ஸ்ரீகாளிங்கநர்த்தனராக காட்சி தந்து அருள்பாலித்த திருத்தலம். இவர் கிருஷ்ணரின் பேரருளால் எழுதிய, அலைபாயுதே கண்ணா, ஆடாது அசங்காது வா கண்ணா முதலான பாடல்கள் வெகு பிரபலம்.

இத்தனைப் பெருமைகள் கொண்ட திருத்தலத்தில், குழந்தைப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், நாகதோஷம் நீங்கவும், நீண்ட நாள் நோய்கள் குணமாகவும், கலைத்துறைகளில் முன்னேற்றம் காணவும் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது என்று போற்றுகின்றனர்.

ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயில், தென்கோகுலம், தேனுஸ்வாஸபுரம், ஸ்ரீ விஷ்ணு தாண்டவத்ஸ்தலம் எனும் பெருமைகள் பல கொண்ட பூமி இது.

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இந்தக் கோயிலில், ஆகஸ்ட் 24-ம் தேதி புதன்கிழமை, ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 25-ம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவமும் நடைபெறுகிறது.

26-ம் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், மஹா தீபாராதனையும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்