ஆப்நகரம்

மார்ச் 20,21ல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு!

திருப்பதி கோயிலில் நாளையும், நாளை மறுநாளும் இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2018, 12:17 pm
திருப்பதி கோயிலில் நாளையும், நாளை மறுநாளும் இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil free darishan in tirumala temple
மார்ச் 20,21ல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு!


திருமலை திருப்பதி தேவஸ்தானம், மாதந்தோறும் இரண்டு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர்களுக்கு இலவச தரிசன வசதி வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த மாதத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 20ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. அதேபோல், மார்ச் 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம், 1:30 மணிவரை, ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசன வசதி செய்யப்பட உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்