ஆப்நகரம்

தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் கடவுள்!!

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் தான் அவர்.

TNN 26 Dec 2016, 6:08 am
எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் தான் அவர்.
Samayam Tamil god is search and find treasure
தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் கடவுள்!!


ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது.

துறவியை நெருங்கிய அந்த இளைஞன், "சுவாமி எனக்கு ஒரு சந்தேகம் கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்லமுடியுமா?" என்று கேட்டான். துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவர் மௌனம் உணர்த்தியது. "சுவாமி நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?" என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.

"கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே" என்றார். இளைஞனுக்கு கோபம்!! வாயே திறக்கவில்லை சொல்லியாச்சு என்கிறீர்களே? என்று சற்று கோபமாகக் கேட்டான். "மகனே மௌனமே எனது பதில் என்றார் துறவி.

இளைஞனோ "இப்படி புதிர்போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்” என்றான்.
"ஆன்மிகத்தின் ஒட்டு மொத்த உருவே மௌனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மௌனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்" என்ற துறவி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தார்.
God is search and find treasure

அடுத்த செய்தி

டிரெண்டிங்