ஆப்நகரம்

குடியாத்தம் கங்கையம்மனின் சிரசு உற்சவம் - பக்தர்கள் பரவசம்

வேலூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடியாத்தம்.

TNN 15 May 2017, 1:11 pm
வேலூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடியாத்தம். இங்குள்ள கங்கையம்மன் ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் முதல் நாளன்று அம்மனின் சிரசு உற்சவம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Samayam Tamil gudiyatham gangai amman festival
குடியாத்தம் கங்கையம்மனின் சிரசு உற்சவம் - பக்தர்கள் பரவசம்


ஒரு காலகட்டத்தில் சோழ மன்னனான குலோத்துங்கச் சோழன், காடாக இருந்த இப்பகுதியை திருத்தி நாடாக்கி ஏராளமான மக்களை இங்கு குடியேறச் செய்ததாகவும், அதனால் இந்த ஊர் குடியேற்றம் என்றும் குடியேற்ற நல்லூர் என்றும் அழைக்கப்பட்டு மருவி தற்போது குடியாத்தம் என்று வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இத்தலத்தில் கங்கையம்மன் திருவிழா ‘‘கெங்கையம்மன் சிரசுத் திருவிழா’’ என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் முதல் நாள் (பெரும்பாலும் மே மாதம் - 14 அல்லது 15ம் தேதி) மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நா டகா மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த சிரசுத் திருவிழாவின் போது கங்கையம்மனின் பிர மாண்டமான சிரசு ஒரு குறிப்பிட்ட இனத்தவரால் காலங்காலமாக உருவாக்கப்படுகிறது. திருவிழா நாளன்று இந்த சிரசு மேளதாளங்களோடு, லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 3 கி.மீ. தொலைவிலுள்ள ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த சிரசை எடுக்கும் உரிமை குறிப் பிட்ட குடும்பத்தினருக்கு பரம்பரையாக அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தேவியின் உடலோடு இந்தச் சிரசு பொருத்தப்படுகிறது. இதன்மூலம் தேவி உயிர் பெற்று எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம். இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான அம்சமாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தேவியின் சிரசு பவனி வரும் ஊர்வலத்தில் புலி வேஷம், கரகம் போன்ற கிராமிய நடனங்களும் மேளதாளங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றால் தேவி மகிழ்ச்சி அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்