ஆப்நகரம்

அகரம் கோவிந்தவாடியில் குரு தட்சிணாமூர்த்திக்கு பூஜை

காஞ்சிபுரம்- அரக்கோணம் பேருந்து வழியில் உள்ளது கம்மவார்பாளையம். இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அகரம் கோவிந்தவாடி எனும் அற்புதமான தலத்தை அடையலாம். குரு தட்சிணாமூர்த்தி அழகுறக் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

TOI Contributor 9 Jun 2016, 4:22 pm
காஞ்சிபுரம்- அரக்கோணம் பேருந்து வழியில் உள்ளது கம்மவார்பாளையம். இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அகரம் கோவிந்தவாடி எனும் அற்புதமான தலத்தை அடையலாம். குரு தட்சிணாமூர்த்தி அழகுறக் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
Samayam Tamil guru dakshinamurthy pooja in sri dakshinamurthy temple govindavadi
அகரம் கோவிந்தவாடியில் குரு தட்சிணாமூர்த்திக்கு பூஜை


கோயில் கோஷ்டப் பகுதியில், சுமார் ஆறடி உயரத்தில் அழகிய திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரின் கண்களை அமைத்திருக்கும் விதம், கொள்ளை அழகு. குரு தட்சிணாமூர்த்தியின் கண்கள், நம்மைப் பார்ப்பது போலவும் இருக்கும். எவரையும் பார்க்காதது மாதிரியும் இருக்கும். இவரை வியாக்யான தட்சிணாமூர்த்தி என்கிறார்கள்.

வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிந்தவாடி தலத்துக்கு வரும் பக்தர்கள் அதிகம். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!

இன்று வியாழக்கிழமை. எனவே காலையில் இருந்தே ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்