ஆப்நகரம்

பாடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா!

ஆவடி நெடுஞ்சாலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அருகில், லூகாஸ் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ளது திருவலியதாயம் திருத்தலம். தற்போது பாடி என்று அழைக்கப்படும் இடம் இது!

TNN 31 Jul 2016, 3:48 pm
சென்னை: ஆவடி நெடுஞ்சாலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அருகில், லூகாஸ் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ளது திருவலியதாயம் திருத்தலம். தற்போது பாடி என்று அழைக்கப்படும் இடம் இது!
Samayam Tamil guru transit festival at padi temple
பாடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா!


தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 21-வது தலமாகும். மூலவர் சுயம்பு லிங்கமாக திருவலிதாய நாதர், வல்லீசர் எனவும், அம்மன் தாயம்மை, வடமொழியில் ஜகதாம்பாள் எனவும் திருநாமம் கொண்டும் அருள் புரியும் ஒப்பற்ற திருத்தலம். இந்தத் தலத்தில் வியாழபகவான் தனிசந்நதியில் கோயில் கொண்டுள்ளார்.

குருப்பெயர்ச்சியாவதை முன்னிட்டு ஆகஸ்டு 1ம் தேதி நாளை முதல் 3ம் தேதி வரை லட்சார்ச்சனை விழாவும், 2-ம் தேதி குருப்பெயர்ச்சி நாளன்று, ஒரு நாள் மட்டும் குரு பரிஹார ஹோமமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகளும் ஊழியர்களும் செய்து வருகின்றனர். பூஜை மற்றும் ஹோம ஏற்பாடுகளை சிவாச்சார்யர்கள் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்