ஆப்நகரம்

2ம் தேதி குருப்பெயர்ச்சி பூஜை! கோயில்களில் ஏற்பாடுகள் தீவிரம்!

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குருப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

TOI Contributor 27 Jul 2016, 6:51 pm
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குருப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Samayam Tamil guru transition in astrology on august 2nd
2ம் தேதி குருப்பெயர்ச்சி பூஜை! கோயில்களில் ஏற்பாடுகள் தீவிரம்!


2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதை முன்னிட்டு ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் குரு பகவான் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயம், ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோயில், சென்னை கோயம்பேடு அருகில் உள்ள பாடி லூகாஸ் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ள திருவலிதாயம் திருக்கோயில், அரக்கோணத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம், தக்கோலம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம், திருச்சி உத்தமர்கோவில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மா கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் சிறப்பு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரக்கோணம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக் கிராமமான கோவிந்தவாடி அகரத்தில் குரு தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் கருவறையை சுற்றியுள்ள வெளிப்பிரகாரத்தில் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளியிருப்பார்.

ஆனால் கோவிந்தவாடி அகரம் என அழைக்கப்படும் இந்த ஊர் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் தனி சன்னிதியில் குரு தட்சிணாமூர்த்தி உள்ளார்.

தக்கோலம் ஸ்ரீஜலநாத ஈஸ்வரர் கோயிலில் குரு தட்சிணாமூர்த்தி கோஷ்ட மூர்த்தியாக தெற்கு நோக்கி சாய்ந்த கோலத்தில் அமைந்துள்ளார். இது போன்று, வேறு எங்கும் தரிசிக்க அபூர்வமான தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் சிறப்பு என்கிறார்கள்.

குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் சிவாலயங்களில் நடைபெற்று வருகின்றன. குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோவிந்தவாடி அகரத்துக்கு அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளையும், தக்கோலத்துக்கு சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருவாலங்காடு ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்குகின்றன.

இதேபோல் தஞ்சாவூர் திட்டை, ஆலங்குடி முதலான தலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்