ஆப்நகரம்

மத ஒற்றுமையை போதித்த குருநானக்கின் பிறந்த நாள் இன்று.!

சீக்கியர்களின் பத்து குருமார்களில் முதன்மையானவரான குருநானக்கின் அவதார தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

TNN 4 Nov 2017, 11:30 am
சீக்கியர்களின் பத்து குருமார்களில் முதன்மையானவரான குருநானக்கின் அவதார தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil gurunanak jayanthi anniversary today
மத ஒற்றுமையை போதித்த குருநானக்கின் பிறந்த நாள் இன்று.!


இந்து-முஸ்லீம்களின் ஒற்றுமைக்காக சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்து தன்னலமற்ற சேவையே, இறைவனை அடைவதற்கான மார்க்கம் என்று போதித்தவர் குருநானக். இந்த நாளை குருவுடன் சங்கமிக்கும் நாளாகவும் பூரணத்துவம் அடையும் நாளாகவும் குருபூரப் என்ற பெயரில் சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

குருநானக் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் 1469ஆம் ஆண்டு ஏப்ரல் 15ல் பிறந்தார். அவர் பிறந்தது ஏப்ரல் மாதமாக இருந்தாலும், ஓவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாதம் பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாகக் கொண்டாடப் படுகிறது.

இதற்காக, உலகமுழுவதும் உள்ள சீக்கிய மதத்தவர்கள் இங்கு வருகை தந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் பலர் விசாவுக்காக விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலித்த பாகிஸ்தான் தூதரகம் 2600 இந்தியர்களுக்கு விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gurunanak jayanthi anniversary today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்