ஆப்நகரம்

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க என்பதன் உண்மையான விளக்கம் தெரியுமா?

பழமொழிகள் நம் வாழ்வை சிறப்பாக வழிநடத்துவதற்காக முன்னோர்களால் சொல்லப்பட்டவை. ஒவ்வொரு பழமொழியில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து காணப்படுவது வழக்கம். சிலவற்றை தவறான பொருள் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. அப்படி ‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க’ என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் என்பதை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 25 Jan 2021, 6:47 pm
‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க’ என்ற பழமொழி பல காலமாக தவறான பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. அதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமானால் அதற்கு அண்ணன் தம்பியை விட அடி தான் உதவும் என்று கூறுகின்றனர். அதே போல் குழந்தைகளை அடித்து வளர்த்தல் போன்ற கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்தாகும்.
Samayam Tamil Rama Marriage
Rama Marriage


உண்மையான விளக்கம் :
இறைவனின் திருவடியைப் பற்றுவதால் நமக்கு உண்டாகும் நன்மையும், மோட்சத்தையும் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள். அதாவது பற்றுக பற்றற்றான் பாதந்தனை என்பார்கள்.

மற்றொரு விளக்கமாக பரதன் நாடாள வேண்டும் என கூறிவிட்டு, ராம, லட்சுமணர்கள் வனவாசம் சென்றுவிட்டனர். வனவாசம் செல்வதை கைவிட்டு நாடாள வர வேண்டும் என பரதன் கேட்டுக் கொண்டதை ராமன் மறுத்தார்.

அனுமனைப் பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி

அதனால் அவரின் பாதணிகளை பெற்றுக் கொண்டு தன் தலையில் வைத்துக் கொண்டு அயோத்தி வந்தடைந்தார்.

ராமன் திரும்பி வரும் வரை அரியணையில் இராமனின் பாதணிகளை வைத்து, பரதன் நாடாண்டார்.

சீதைக்காக மட்டுமா ராமன் ராவணனை கொன்றார்?... உண்மையான காரணம் இதுதான்...

பரதனுக்கு ராமனின் திரு அடி உதவியது போல அண்ணன் (ராமன்), தம்பி (லட்சுமணன்) உதவவில்லை என்பது தான் ராமாயணம் மூலம் நமக்கு இந்த பழமொழிக்கான பொருளாக கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்