ஆப்நகரம்

அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

அமாவாசை திதியில் நாம் ஏன் முன்னோர்களை வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் நாம் எந்த மந்திரத்தை படிக்க வேண்டும், எப்படிப்பட்ட வழிபாடு செய்ய வேண்டும் எனப்தை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 16 Oct 2020, 1:39 pm
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி பலன்களை நம்மில் பலர் மிக கவனமாக பார்த்து வருகிறோம். ஆனால் அன்றாட நிகழ்ந்து கொண்டிருக்கும் சந்திரன் பெயர்ச்சிக்கும் பெரியளவில் முக்கியத்துவம் உண்டு என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
Samayam Tamil Amavasya Tharpanam Mantraa
Amavasya Tharpanam Mantraa



ஆனால் சந்திரனின் பெயர்ச்சி என தனியாக பார்க்காமல், நாம் அமாவாசை, பெளர்ணமி, சந்திராஷ்டமம் என சந்திரனை மையமாக கொண்டு நாம் நாட்களை கவனிக்கிறோம்.

வீட்டிலேயே ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதற்கான மந்திரம் மற்றும் செயல்முறை
அனைத்து அமாவாசை தினங்களிலும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்குவது வழக்கம். அதே போல் பெளர்ணமி அன்று பல ஆலயங்களில் மாதங்களைப் பொறுத்து முக்கிய திருவிழா நிகழ்வுகள் நடப்பது வழக்கம்.


அமாவாசை, பெளர்ணமி தினங்களில் சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் திங்கட்கிழமை அமாவாசை வந்தால் மிகவும் விசேஷமாக பார்க்கப்படும்.

அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?: ஆண், பெண்களுக்கான விரத முறைஅமாவாசை வழிபாடும், மந்திரமும்
அமாவாசை திதியில், அரசமரத்தை நாம் மகா விஷ்ணுவாக பாவித்து கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தைச் சொல்லிய படி அதை 108 முறை சுற்றி வந்து வணங்க வேண்டும்.


‘மூலதோ பிரம்ஹரூபாய,
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ
ராஜய தே நமோ நம’

இப்படி செய்து வர அனைத்து நற்பலன்களும் வந்து சேரும்.

பித்ரு தர்ப்பணம் என்றால் என்ன?: தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இடையே உள்ள வேறுபாடுகள்

ஏன் அமாவாசையில் வழிபடவேண்டும்?
நமக்கு ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு பித்ரு சாபம் தான் காரணமாக அமைகிறது.
அமாவாசை தினங்களில் பித்ருக்கள் நம் வீட்டிற்கு வருவதாக மானசீகமாக நினைத்து வழிபட்டு, அவர்கள் உயிருடன் இருக்கும் போது எப்படி கவனிப்போமோ அது போன்று அவர்களுக்கு சாதமிட்டு அவர்களுக்கு பிடித்த உணவை வைத்து வழிபட வேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வர நம் வாழ்வில் துன்பங்கள் நீங்கு வசந்தம் வீசும்.

ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?: தர்ப்பணதிற்கு உரிய நாட்கள் இதோ

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று உச்சரிக்கப்பட வேண்டிய மந்திரம்:

ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உஸ்ரீஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்

என்ற மந்திரத்தை வீட்டில் முன்னோர்களை நினைத்துச் சொல்ல வேண்டும். அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட பின்னர் தான் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்