ஆப்நகரம்

பீஷ்ம ஏகாதசி 2023 எப்போது? இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாடப்படும் காரணமும், விரதம் இருக்கும் முறையும்

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. இது போல் தை மாதத்தில் வரும் ஏகாதசிக்கு பீஷ்ம ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 2023 ம் ஆண்டு பீஷ்ம ஏகாதசி எப்போது வருகிறது, இந்த நாளில் எதற்காக விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும், பீஷ்ம ஏகாதசியன்று எப்படி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 30 Jan 2023, 7:10 pm
தை மாதத்தில் வரம் முக்கிய விரத நாட்களில் பீஷ்ம ஏகாதசியும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டு தை மாதத்தில் வரும் ஏகாதசிக்கு பீஷ்ம ஏகாதசி என்று பெயர். இது ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் வரும்.பீஷ்ம ஏகாதசி பொதுவாக வட இந்தியாவை விட தென்னிந்திய மாநிலங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலேயே அதிவிசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது வைகுண்ட பதவியை பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
Samayam Tamil bishma


திருப்பதியில் திடீரென அதிகரிக்கும் கூட்டம் : தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

பீஷ்ம ஏகாதசி 2023 எப்போது ?

2023 ம் ஆண்டில் பீஷ்ம ஏகாதசியானது பிப்ரவரி 01 ம் தேதியன்று வருகிறது. ஜனவரி 31 ம் தேதி மாலை 03.49 துவங்கி, பிப்ரவரி 01 ம் தேதி மாலை 05.02 வரை ஏகாதசி திதி நீடிக்கிறது. இந்த நாளில் விரதம் இருப்பது வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருக்கும் பலனை கொடுக்கும் என புராணங்கள் சொல்கின்றன. வட மாநிலங்களில் இது ஜெய ஏகாதசி என்ற பெயரால் கொண்டாடப்படுகிறது.

அம்பாளின் இந்த தரிசனத்தை காண்பவருக்கு மறுபிறவியே கிடையாது

விஷ்ணு சகஸ்ரநாமம் பாடப்படுவது ஏன்?

மகா பாரத போரின் முடிவில் அம்பு படுக்கையில் இருந்த பிதாமகன் பீஷ்மர், பாண்டவர்களுக்கு விஷ்ணுவின் ஆயிரம் நாமம் உரைத்தார். பீஷ்மர் உரைத்த இந்த ஆயிரம் நாமங்களையே விஷ்ணு சகஸ்ரநாமம் என்கிறோம். மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணன் முன்பாக விஷ்ணு சகஸ்ரநாமத்தை கூறி முடித்த பிறகே பீஷ்மரின் உயிர் பிரிந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் மோட்சம் அடைந்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இதனால் அந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மோட்சத்தை அளிக்கும் என சொல்லப்படுகிறது.

தைப்பூசத்தன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள்

பிஷ்ம ஏகாதசியன்று விரதம் இருக்கும் முறை :

* இந்த நாளில் முழுவதுமாகவோ அல்லது பால், பழம், காய்கறிகள், உலர் பழங்கள் சாப்பிட்டோ விரதம் இருக்கலாம்.

* அரிசி, தானியங்களை உணவாக எடுத்துக் கொள்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

* விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது அதிவிசேஷமானது.

* விஷ்ணு சகஸ்ரநாம மந்திரம் பாராயணம் செய்யும் போது மஞ்சள் நிற ஆடை உடுத்தி இருப்பது மிகவும் விசேஷமானது.

* மஞ்சள் நிற இனிப்பு வகை அல்லது பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

* பசுக்களுக்கு இந்த நாளில் மஞ்சள் நிற வாழைப்பழம் உணவாக அளிப்பது நல்லது.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்