ஆப்நகரம்

சர்வ மங்களம் உண்டாக சொல்ல வேண்டிய அபிராமி அந்தாதி பாடல்

நம் செயலில் வெற்றியும், நம் குடும்பத்திற்கு சர்வ மங்களம் உண்டாவதற்கு நாம் பாட வேண்டிய அபிராமி அந்தாதி பாடலை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 19 Jan 2021, 8:03 pm
நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்போம். அப்படி நாம் செய்யக்கூடிய செயலில் வெற்றி மட்டுமில்லாமல், நம் குடும்பத்திற்கும், நம் பணியிடத்திலும், நம் உறவினர்கள், நண்பர்களுக்கு நல்லனவை நடக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.
Samayam Tamil Abhirami Anthadhi
Abhirami Anthadhi


இப்படி சர்வ விஷயங்களிலும் மங்களம் உண்டாக நாம் முன்னெடுக்கும் செயலை தொடங்குவதற்கு முன் அபிராமி அந்தாதியில் வரக்கூடிய பாடலை அன்னை அபிராமியை நினைத்து துதிப்பது அவசியம்.

அபிராமி அந்தாதி பாடல்:

தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா

மனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.


ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதகே|

சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ||


பொருள்:

எல்லா மங்களங்களுக்கும் மங்களமாகத் திகழ்பவளே,

சிவபெருமானின் நாயகியே,

பக்தர்களின் எல்லா ஆசைகளையும் (இச்சைகள்) பூர்த்தி செய்யக்கூடியவளே,

எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவளே

மூன்று கண்களை உடையவளே,

குறைவில்லாத மேனி நிறமுடையவளே

தேவி உன்னை வணங்குகிறேன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்