ஆப்நகரம்

ஆலயங்களில் இதை செய்தால் பாவம் வரும்! - கோயிலில் செய்ய வேண்டிய விஷயங்கள்

நாம் கோயிலுக்கு செல்லும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன, நாம் செய்யக் கூடாத முக்கிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...

Samayam Tamil 26 May 2020, 8:59 pm
நம் மனக்கவலைகளைப் போக்கக் கூடியதும், நம் எதிர்மறை சிந்தனைகளை ஒடுக்கி, நற்சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், அதிர்வுகளைத் தரக் கூடிய ஒரு இடம் தான் நாம் இறைவனை வழிபட செல்லக் கூடிய கோயில்.
Samayam Tamil Hindu Temple
Rules we Should Follow in Hindu Temple


கோயிலுக்கு சென்று வந்தால் நமக்கு மன ஆறுதல் ஏற்பட காரணம், அங்கு இருக்கக் கூடிய நேர்மறை அதிர்வுகள் தான் காரணம். அதனால் தான் கோயில் புனிதமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்தில் நாம் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாதது என்ன என்பதை இங்கு பார்ப்போம்...

ஆலயத்தில் செய்ய வேண்டியது :
ஆலயத்தில் நுழைந்ததும் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் அனைத்து சிந்தனைகளையும் இறைவன் மீது வைக்கவும்.

இறைவனை நினைத்து அவனின் போற்றி பாடலை மனதில் சொல்லிக்கொள்ளுங்கள்.

இறைவனை வணங்கிவிட்டு அவனை நினைத்து தியானம் செய்யலாம்.

நம்மால் முடிந்தளவு கோயில் திருப்பணி செய்யலாம். கோயில் உழவாரப் பணிகளில் ஈடுபடுவது இறைவனின் அருளைப் பெற்றுத்தரும்,

அன்னதானம், நைவேத்தியம் செய்யலாம்.

கோயிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஏழை, எளியோருக்கு முடிந்தளவு உதவி செய்யுங்கள். பணமாகவோ, பொருளாகவோ இருக்கலாம்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனை சேரும்.

கோயிலுக்கு சென்று வந்த பின் தானம் செய்தால் புண்ணியம் சென்றுவிடுமா?

காலை நேரத்தில் ஆலயத்தை சுற்றி வழிபடும் போது நம் உடல் நலம் மேம்படும்.
மாலை நேரத்தில் நாம் பிரகாரத்தை வலம் வந்து வழிபடுவதால் நாம் செய்த பாவங்கள் அழியும்.
இரவு நேரத்தில் நாம் வலம் வந்து வணங்கும் போது நமக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சிவன் கோயிலில் இறைவனை வணங்கி விட்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வர வேண்டும். பெருமாள் கோயிலில் இறைவனை வணங்கி அங்கு அமராமல் வந்து விட வேண்டும் என்பது நம்பிக்கை.

தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்

செய்யக் கூடாத விஷயம் :
ஆலயத்துக்குள் நாம் செய்யக் கூடாத முக்கிய விஷயம், நம்மை பற்றி மற்றவர்களிடம் தற்பெருமையாகப் பேசுவது கூடவே கூடாது.

கோயிலில் கொடுக்கப்படும் திருநீறு, குங்குமம், சந்தனம் உள்ளிட்ட சுவாமி பிரசாதத்தை கோயிலின் சுவரில் தடவி வைப்பது, கொட்டி வைப்பது பாவம் ஏற்படுத்தும்.

கோயிலில் நுழையும் போது அதன் பிரதான வாயில் வழியாக வெளியே செல்லவும். வேறு வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைய வேண்டாம்.

பிறரின் ஆடை, ஆபரணங்கள் மீது உங்கள் பார்வை செல்ல வேண்டாம். இறைவனை முழுவதுமாக நினைத்து அவனை வணங்குவதை மட்டும் செய்யவும்.

தீபம் ஏற்ற வேண்டிய திசைகள் - எந்த எண்ணெய் பயன்படுத்தினால் பலன் அதிகம்?


குளிக்காமல் கோயிலுக்கு செல்லக் கூடாது.

கோயிலில் குப்பைகளைப் போடக் கூடாது.

கோயிலில் மற்றவர்களிடம் கோபமோ, எரிச்சலோ அடைய வேண்டாம்.
கோயிலில் படுத்து உறங்கக் கூடாது.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கோயிலுக்குச் செல்லக் கூடாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்