ஆப்நகரம்

எந்த சாமியை எத்தனை முறை வலம் வருதல் வேண்டும் தெரியுமா?

சிவன் கோயில், பெருமாள் கோயில், பிள்ளையார், அம்பிகை கோயிலில் எத்தனை முறை வலம் வந்து வணங்க வேண்டும் (பிரதட்சணம்) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்...

Samayam Tamil 6 Apr 2020, 9:15 pm
நாம் கோயிலுக்கு சென்றால் பொதுவாக சுவாமியை மூன்று முறை வலம் வந்து வணங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளோம். ஆனால் எந்த சுவாமியை எத்தனை முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன் படி வணங்கி இறைவனின் அருளைப் பெறுவோம். நாம் சுவாமியை தரிசித்து வலம் வரும் போது தெய்வ சிந்தனையும், சுவாமியின் போற்றியை சொல்லிக் கொண்டே சுற்றுதல் வேண்டும். உங்களுடன் வந்தவருடன் பேசிக்கொண்டே சுற்றக் கூடாது.
Samayam Tamil Vishnu Temple
Vishnu Temple


பிள்ளையாரை ஒரு முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.

பிரதோஷத்தின் போது சிவன் கோயிலில் எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்... முழுவிபரம் இதோ

சிவன் பெருமானை மூன்று முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்

அம்பாள் ஐந்து முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்

பெருமாள் ஐந்து முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்.

நவகிரகத்தை ஒன்பது முறை சுற்ற வேண்டும்.

  • கிருஷ்ணரின் 8 மனைவிகளும், 80 குழந்தைகள் குறித்த கதை தெரியுமா? - படித்தால் பிரமிப்பு ஏற்படும்!
அரசமரத்தை ஏழு முறை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். அதுவும் காலை 9 மணிக்கு மேல் அரச மரத்தை சுற்றக் கூடாது என முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்தையும் வலம் வந்து வணங்கும் முறையை வகுத்து வைத்தனர்.

ஏன் காலை 9மணிக்கு மேல் அரசமரத்தை சுற்றக்கூடாது?
அரசமரத்தை காலையில் சுற்றி வருவது தான் உன்னதமானது. ஏனெனில் அரசமரத்திலிருந்து செரிட்டோன் என்ற வாயு வெளி வரும். அதை நாம் சுவாசித்தால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதே போல் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுசேர்க்கும் வாயுவும் அரசமரம் வெளியிடுவதாக கூறப்படுகிறது.

நீங்கள் செய்யும் தவறுக்கு அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் தெரியுமா? - அழிவில்லா கர்மா
காலை 9 மணிக்கு மேல் அரச மரத்தை சுற்றக் கூடாது. அப்படி சுற்றினால் நமக்கு இருக்கும் ஞாபக சக்தி குறையுமாம். அதனால் காலை 9 மணிக்கு மேல் பிள்ளையார் கோயிலில் அரசமரம் இருக்கும். நாம் பிள்ளையாரை மட்டும் வணங்கி வந்து விடுவதே போதுமானது. அரசமரத்தைச் சுற்ற வேண்டாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்