ஆப்நகரம்

கோயில் திருப்பணிக்கு நன்கொடை கொடுத்துள்ளீர்களா? - யார் பக்தி உயர்ந்தது தெரியுமா?

அனைவரும் இறைவன் மீது பக்தி செலுத்துகிறோம். ஆனால் யாருடைய பக்தி மிக உயர்ந்தது என நாம் கணக்கிட்டால் சிலரின் இறைபக்தி மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். அப்படி பக்தியில் உயர்வை காட்டியவர்கள் தான் ஆழ்வார்கள், நாயன்மார்கள். அந்த வரிசையில் யாரின் பக்தி சிறந்தது என்பதை இங்கு சிறு கதையில் பார்ப்போம்.

Samayam Tamil 27 Nov 2020, 6:55 pm
ஒரு ஊரில் கோயில் கட்டுவதற்கு, அந்த ஊர் பெரியோர்கள் எல்லாம் சேர்ந்து பல்வேறு இடங்களில் மக்களிடம் நன்கொடை வசூல் செய்து கோயில் கட்டி இறைப்பணி செய்தனர். கோயிலுக்கு நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிக்கப்படும் என திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர்.
Samayam Tamil Thanjavur Bragatheeswarar Temple
Thanjavur Bragatheeswarar Temple


இதையடுத்து அந்த ஊர் பண்ணையார் தன்னுடைய பெயர் கோயில் கல்வெட்டில் முதலில் வர வேண்டும் என்ற எண்ணத்தில், கோயிலுக்கு 5 லட்சம் ரூபாயை திருப்பணிக்கு வழங்கினார்.

மகரத்தில் குரு மற்றும் சனி இணையும் குரு சண்டாள யோகம்!- யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம், யார் கவனமாக இருக்க வேண்டும்?

கோயில் பணி முடிந்து கும்பாபிஷேகத்திற்குத் தயாரானது. கல்வெட்டுக்கள் பதிக்கப்பட்டது. தன் பெயர் தான் முதலில் இருக்கும் என நினைத்து ஆவலாக வந்து பார்த்த பண்ணையாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பண்ணையாளரின் பெயர் கல்வெட்டில் இரண்டாம் இடத்தில் தான் இருந்தது.

அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, கல்வெட்டு பெயர் பட்டியலில் முதல் இடத்தில் பண்ணையாளரின் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து கோயில் திருப்பணி குழுவினரிடம் கேட்ட பண்ணையாளருக்கு மிக வியக்க வைக்கும் பதில் கிடைத்தது.

குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய மகாபாரதக் கதையும் அதன் நீதியும்

உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரன் மிகவும் ஏழை தான். ஆனால் அவன் கோயிலுக்கு என கேட்ட போது கர்ணனாகவே மாறிவிட்டான். கோயிலுக்கு லட்சம், ஆயிரம் என கொடுத்தவர்களுடன் ஒப்பிடும் போது, அவர் கொடுத்த பணம் மிக குறைவு தான்.

நீங்கள் அறியாத ஐயப்பன் கத், சபரிமலை கோவில் வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை

நீங்கள் உள்பட பல லட்சம் கொடுத்த பலரும், தங்களின் செல்வத்தில் ஒரு பகுதியைத் தான் கொடுத்தார்கள். ஆனால் உங்கள் வீட்டு வேலைக்காரனோ, தன்னிடம் இருந்த கொஞ்ச பணத்தை கொடுத்ததோடு, வீட்டையும் கொடுத்து விட்டான். அதன் மதிப்பு குறைவு என்றாலும், அவர், இறைவன் மீது வைத்திருக்கும் பக்தியும், கோயில் திருப்பணியில் பங்கெடுக்க வேண்டும் என்ற சிந்தனை, செல்வங்கள் இழந்தாலும் இறை அருளால் மீண்டும் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருப்பதைப் பார்த்து தான், இவரைப் போல் யாராலும் கொடுக்க முடியது என்ற எண்ணத்தில் கல்வெட்டில் முதல் பெயராக அவரின் பெயர் பொறிக்கப்பட்டது என்றார்.

இதைக் கேட்டு பண்ணையார், அவரின் பக்தியை மெச்சினார். பதில் பேசமுடியாமல் மௌனித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்