ஆப்நகரம்

எந்த கிழமைகளில் பைரவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?- அதன் பலன்கள் இதோ

பைரவருக்கு எந்தெந்த கிழமைகளில் எப்படி வழிபாடு செய்தால் என்ன நன்மைகள் ஏற்படும். பைரவரை வழிபாடு செய்யும் முறைகள் இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 27 May 2020, 6:23 pm
சிவ பெருமானின் அவதாரங்களில் ஒருவர் பைரவர் என்பது நமக்கு தெரியும். பயத்தை நீக்கி தைரியத்தையும், காரிய வெற்றியை கொடுக்கக் கூடிய பைரவரை ஒவ்வொரு கிழமைகளில் எப்படி வழிபட வேண்டும். அதனால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்...
Samayam Tamil Bairavar Worhsip
Bairavar Worhsip


ஞாயிற்றுக்கிழமை:
ஒவ்வொரு ஞாயிறுக்கிழமைகளில் நாம் பைரவருக்கு ராகு காலத்தில் வடை மாலை சாற்றியும், ருத்ராபிஷேகம் செய்து வழிபடுவதால் பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரும். திருமண தங்கள் நீங்கும்.

அதோடு பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை சாற்றியும், புனுகு சாற்றி வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

பைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்

திங்கட் கிழமை
திங்கட்கிழமைகளில் நாம் வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சனை செய்து வழிபடுவதால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி தினங்களில் நாம் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதும், புனுகு சாத்துதல், சந்தன காப்பு செய்து வழிபடுவதால் கண் சார்ந்த பிரச்னைகள், நோய்கள் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வருவதால் இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.

கால பைரவர் 108 போற்றி, காயத்ரி மந்திரம்

புதன்கிழமை:

புதன் கிழமைகளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், வீடு, மனை, பூமி லாபம் கிடைக்கும்.

வியாழக்கிழமை:
வியாழக்கிழமைகளில் பைரவருக்கு மனமார விளக்கேற்றி வழிபட்டு வந்தால், பில்லி, சூனியம், ஏவல் விலகி நன்மை உண்டாகும்.

பயம் நீங்கி தைரியம் பெற கால பைரவர் வழிபாடு செய்வது எப்படி?

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் பைரவருக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

சனிக்கிழமை:சனி பகவானின் குரு பைரவர். அதனால் சனிக்கிழமைகளில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு செய்வதால் ஏழரைச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி உள்ளிட சனி பகவானால் ஏற்படக் கூடிய பிரச்னைள் நீங்கும். பாதிப்பு குறையும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்