ஆப்நகரம்

தெய்வங்களைப் போல மகான்களையும் தரிசனம் செய்வது அவசியமா? - மகான் தரிசனத்தால் நமக்கு என்ன கிடைக்கும்?

தெய்வ வழிபாட்டைப்போல் மகான்களின் வழிபாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது ஏன்? அதன் பயன் என்ன, மகான்கள் கொடுத்து சென்ற படிப்பினை என்ன என்பதை இங்கு பார்போம்...

Samayam Tamil 3 Mar 2020, 11:54 am
நம் ஒவ்வொருவரின் பிறப்பும் நம்முடைய கர்ம வினையின் காரணமாக, அதாவது பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது என்பார்கள். அப்படி இருக்க கோயில்களில் தெய்வ வழிபாடு நடத்துவதை தவிர, அதாவது அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவனை வணங்குவது சரி, மகான்களின் சமாதிகளுக்குச் சென்று ஏன் வழிபட வேண்டும். அப்படி மகான்களை தரிசனம் செய்வதால் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுவிடுமா என பலர் கேட்பதுண்டு.
Samayam Tamil Ramanujacharya 1200 wiki



எப்போதும் இறை சிந்தனை கொண்டிருந்த ராமானுஜர், ராகவேந்திரா, நாயன்மார்கள், ஆழ்வார்கள் உள்ளிட்டோர் இறைவனுடன் நேரடியாக கலந்தனர்.

இப்படிப்பட்ட மகான்களின் தரிசனம் ஏன் முக்கியம் என்பதை உணர்த்த ஒரு சிறு உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவரிடம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறைக் காசுகளாக வைத்திருக்கின்றார். ஐந்தாயிரத்துக்கு சில்லறை என்றால் ஒரு மூட்டை அளவு இருக்குமல்லவா. அதை எங்கேயாவது தூக்கிச் செல்ல வேண்டுமானால், மிக பாரமானதாக, அசௌகரியமாக, அதை கையாள்வதே சற்று கடினமானதாக இருக்கும் அல்லவா?

ஒரே மருந்தில் பல நோய்களை குணமாக்குவது எப்படி : சித்தர்கள் சொன்ன எளிய மருத்துவ முறை?

அவர் படும் பாட்டைப் பார்த்து ஒருவர் அவரிடம் உள்ள ஐந்தாயிரம் ரூபாய்க்கான சில்லறைகளை வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக 10 ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுக்கின்றார் என்றால், அதை அவர் எளிதாக அவரின் பையில் வைத்துக் கொண்டு எளிதாக சுமை தெரியாமல் நடந்து சென்றுவிடுவார். அவரின் பாரம் குறைந்து விட்டதல்லவா.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திய கோயில் - பழமையான கோயில்களை ஏன் தரிசனம் செய்ய வேண்டும்?

இதைத் தான் மகான்கள் செய்கின்றனர். கர்ம வினையின் காரணமாக நாம் படும் கஷ்டம் ஏராளம். கர்ம வினையால் ஏற்படும் கஷ்டத்தை அதாவது சில்லறைக் காசுகளைப் போல் இறக்கி வைப்பது போல் நம் மனோநிலையை மகான்கள் மாற்றி விடுகின்றனர்.

மதுரைக்காரங்க கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய புராண நிகழ்வு - பசுமலை எப்படி வந்தது தெரியுமா?

இதனால் நமது ஆத்ம சக்தி பலமாகிறது. பாவ புண்ணியங்கள் சம நிலையை அடைய மகான்களின் சன்னிதியில் நாம் அடிக்கடி சென்று வணங்கி வர நமது பாவ வினைகள் நீங்கும் என்பது மற்றொரு அசைக்க முடியாது நம்பிக்கையாக இன்றளவும் உள்ளது.

இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாம் அடிக்கடி மகான்களின் சன்னதியில் தரிசனம் செய்து வர நாமே அதன் மாற்றத்தை உணர முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்