ஆப்நகரம்

பயம் நீங்கி தைரியம் பெற கால பைரவர் வழிபாடு செய்வது எப்படி?

தொழில், உத்தியோகத்தில் பல்வேறு கவலைகள் இருக்கும். பயம் கலந்த மனநிலையில் இருப்பவர்கள், தைரியம் உண்டாகவும், தொழிலில் முன்னேற்றம் உண்டாக பைரவர் வழிபாடு செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். குறிப்பாக பைரவரை தேய்ப்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

Samayam Tamil 7 Dec 2020, 2:39 pm
பலரும் தங்களின் குடும்ப, தொழில், வியாபாரம், உத்தியோக நிலையை நினைத்து மிக கவலையில் இருப்பதுண்டு. எப்படி நம் வாழ்க்கை அமையுமோ, பொருளாதார நிலை உயருமோ என்ற மிக பயம் கலந்த மன நிலையோடு பலரும் புலம்பிக்கொண்டிருப்பர்.
Samayam Tamil Kala Bairavar


இதுபோன்ற பயம் கலந்த தைரியமற்ற நிலை மாறி, மனதில் தைரியம் அதிகரித்து, எல்லா காரியங்களும் வெற்றி பெற ஒரு சில பரிகாரங்கள், வழிபாடு உள்ளன.
இவர்கள் செய்ய வேண்டிய மிக சிறப்பான வழிபாடு பைரவர் வழிபாடு.

பைரவர் ஜெயந்தி 2020 : அஷ்ட பைரவர்களின் தோற்றமும், பைரவ விரதம் வழிபாடு முறை இதோ!

பைரவர் வழிபாடு செய்வது எப்படி?
பயத்தை போக்கக்கூடிய, தைரியத்தைக் கொண்டுவரக்கூடிய, தொழிலில் முன்னேற்றம் தரக்கூடிய பைரவர் வழிபாடு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

சிவ சொரூபமாக, ருத்ரமூர்த்தியாக இருக்கும் கால பைரவரை வணங்குவதன் மூலம் எல்லா காரியத்திலும் வெற்றி கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
காலத்தினால் ஏற்பட்ட சில பிரச்சினைகளைக் கூட போக்கக்கூடியவர்.

ஸ்ரீ கால பைரவரை எந்த கிழமைகளில், எந்த ராசியினர் வழிபடுதல் சிறப்பு

பௌர்ணமியிலிருந்து ஆரம்பித்து 8 நாட்கள் அல்லது அஷ்டமியிலிருந்து ஆரம்பித்து எட்டு நாள் தொடர்ந்து சிவன் கோயிலுக்கு சென்று, தீபங்கள் ஏற்றி, சுவாமிக்கு உண்டான வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து, பைரவர் முன் நின்று கண்களை மூடி ‘ஓம் பைரவாய நமஹ’ என 108 முறை ஜெபித்து வழிபட வேண்டும். பின்னர் 4 முறை நமஸ்கரனம் செய்து வழிபடவும். அதன் பின்னர் 3 முறை பிரதக்‌ஷனம் செய்து பைரவரை வணங்கி வீட்டுக்கு வர வேண்டும்.

ஸ்ரீ பைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்

இப்படி தினம் தினம் 8 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இப்படி 8 நாட்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய ஒரு காரியத்திற்காக அது வெற்றி பெற வேண்டும் என பைரவரை வேண்டி வர அந்த காரியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை நாம் உணரலாம்.

இதனை தொடர்ந்து செய்து வர நம் வாழ்வில் எந்த ஒரு செயலைச் செய்ய, பயம் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை உண்டாவதோடு, காரியத்தில் சிறப்பான வெற்றி அடைய நமக்கான வழிமுறைகள் கிடைக்கும்.

இப்படி பைரவர் வழிபாடு செய்யுங்கள், வாழ்வில் முன்னேற்றத்தை பெற்றிடுங்கள்.
ஓம் பைரவாய நமக!

அடுத்த செய்தி

டிரெண்டிங்