ஆப்நகரம்

நினைத்த காரியம் அப்படியே நடக்க காஞ்சி மகா பெரியவா கூறும் எளிய வழிமுறை

காஞ்சி மகா பெரியவா தன்னை தேடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆசிகளை மட்டுமல்ல, அறிவுரைகளை வழங்கக் கூடியவர். நீணட் நாள் கஷ்டங்களில் இருக்கும் பக்தர்களுக்கும் கூட எளிய பரிகாரங்களின் மூலம் வழி சொல்லக் கூடியவர். இதனால் மகா பெரியவாவை தரிசனம் செய்ய வரும் பக்தர்களை விட பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு வரும் பக்தர்களே அதிகமாக இருந்தனர்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 28 Jan 2023, 12:20 pm
பக்தி, வாழ்க்கை முறை, எது சரி, எது தவறு என்பவற்றை மிக எளிய உதாரணங்கள், அறிவுரைகள் மூலம் பக்தர்களுக்கு புரிய வைக்கும் தன்மை கொண்டவர் மகா பெரியவா. ஆன்மிகவாதியாக, மகானாக மட்டுமின்றி எளிய மனிதர்களுக்கும் எளிமையானவராக விளங்கியதாலேயே காஞ்சி மகா பெரியவாவை பலரும் தெய்வமாக போற்றி, வணங்கி வருகின்றனர்.
Samayam Tamil kanchi maha periyava advised the solution to overcome from problems
நினைத்த காரியம் அப்படியே நடக்க காஞ்சி மகா பெரியவா கூறும் எளிய வழிமுறை


பிரச்சனைக்கு என்ன காரணம்?

இந்த உலகத்தில் நேர்மறை ஆற்றல், எதிர்மறை ஆற்றல் என இரண்டு விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இந்த இரண்டு ஆற்றல்களும் தான் ஒருவரின் வாழ்க்கையை, எண்ணங்களை, குண நலன்களை தீர்மானிக்கின்றன. வாழ்க்கையில் அனைவரும் ஏதோ ஒரு வகை துன்பம், மனஅழுத்தம், மனக்குறையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன நிறைவுடன், திருப்தியான மகிழ்ச்சியான வாழ்க்கையை யாராவது வாழ்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு காரணம் பிரச்சனைகளுடனேயே வாழ பழகிக் கொண்டதால், அதைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே மனதிற்குள் ஓடிக் கொண்டிருப்பது தான். இந்த எண்ணங்கள் எதிர்மறை ஆற்றல்களால் உருவாகிறது. இவைகள் செயல்களாக உருவாகி, பிரச்சனைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் நம்மை சுற்றி இருந்து கொண்டே இருக்கின்றன.

தைப்பூசம் தோன்றிய கதை தெரியுமா ? தைப்பூசத்தன்று யாரை வழிபட வேண்டும்?

பிரச்சனை தீர என்ன வழி?

காஞ்சி மகா பெரியவாவை சந்தித்த பக்தர்கள் ஒருவர், சுவாமி...என்னை சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என கேட்டார். இதற்கு பதிலளித்த மகா பெரியவா, எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல் அழகாக, அமைதியாக மாறும் என்றார்.

மகா பெரியவா சொன்ன பரிகாரம் :

மகா பெரியவாவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த அந்த பக்தரிடம், பெரியவாவே விளக்கமும் சொல்லி, வழியும் சொன்னார். அவர் கூறுகையில், நாம் தினமும் உணவில் சேர்க்கும் உப்பிற்கு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளது. அதனால் தான் திருஷ்டி சுற்றியும் போதும் உப்பினை பயன்படுத்துகிறோம். பல கோவில்களில் பரிகாரமாக உப்பி வாங்கி வைக்கும் பழக்கம் பல காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

Ratha Saptami 2023: பல ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி தேதி, வழிபடும் முறை மற்றும் மந்திரம்

காலையில் இதை மட்டும் செய்யுங்கள் :

கடலில் குளித்தால் பாவங்கள் தொலையும் என சொல்வதற்கும், கடலில் கால் நனைக்க வேண்டும், கடல் நீரை தலையில் தெளித்து கொள்ள வேண்டும் என சொல்வதற்கும் காரணம் உள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் கிழக்கு நோக்கி அமர்ந்து, மடியில் ஒரு வெள்ளை காகிதத்தை வைத்துக் கொண்டு, இரண்டு கைகளிலும் உப்பினை வைத்து கண்களை மூடி அமர வேண்டும்.

இப்போது பணப்பிரச்சனை இருக்கிறது என்றால், மனதிற்குள்ளாக, எனக்கு நிறைய பணம் வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய பணப் பிரச்சனைகள் அனைத்து நீங்கி விட்டது. இப்போது நான் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கிறேன் என நேர்மறையான வார்த்தைகளை சொல்ல வேண்டும். நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால், எனக்கு உடலில் இப்போது என்ன பிரச்சனையும் இல்லை. நோய் முழுவதுமாக நீங்கி விட்டது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என சொல்ல வேண்டும்.

கும்பாபிஷேகம் என்றால் என்ன? - வீட்டிலேயே கும்பாபிஷேகம் சென்று வந்த பலன் பெறுவது எப்படிதெரியுமா?

எல்லாமே மாறும் :

குடும்பத்தில் பிரச்சனை என்றால், எனது குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விட்டது. குடும்பத்தில் இப்போது அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவுகிறது. வீட்டில் அனைவரும் நலமாக சந்தோஷமாக, அன்பாக இருக்கிறோம் என நினைக்க வேண்டும். மனதிற்குள் இப்படி நேர்மறை வார்த்தைகளை சொல்லி சிறிது நேரம் தியானம் செய்த பிறகு, கையில் வைத்துள்ள உப்பினை, மடியில் வைத்திருந்த காகிதத்தை போட்டு, கீழே சிந்தாமல் மடித்து, ஓடும் நீரில் கரைத்து விட வேண்டும்.

தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் சிறிது நாட்களிலேயே உங்களின் பிரச்சனை தீர்ந்து விடும். உங்களை சுற்றி நேர்மறை அலைகள் இருப்பதை உங்களால் உணர முடியும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையும் நல்லதாக மாறும் என பதிலளித்து ஆசீ வழங்கினார் காஞ்சி மகா பெரியவா.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்