ஆப்நகரம்

மரண பயத்திலிருந்து விடுபட எமன் காயத்ரி மந்திரம்

நம்மை சில நேரங்களில் தொற்றிக் கொள்ளக் கூடிய மரண பயத்திலிருந்து விடுபட எமன் காயத்ரி மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் நன்று.

Samayam Tamil 28 Dec 2019, 3:34 pm
ஒருவர் பிறக்கும் போதே இறக்கின்ற தேதி உள்ளது என்பது மெய். இருப்பினும் பலர் தான் ஏதேனும் நோய் அல்லது சிறு வியாதி ஏற்பட்டாலும் அவர்களுக்கு மரண பயம் தொற்றிக் கொள்வதும் அதனால் அவதிப் படுவது உண்டு.
Samayam Tamil Yama wiki


அவர்கள் இந்த எமன் காயத்ரி மந்திரம் சொல்லி வர மரண பயம் நீங்கும்.
இந்த மந்திரத்தைச் சனிக்கிழமையில் காலை தூங்கி எழுந்த உடன், தெற்கு திசை நோக்கி நின்று எம தர்மராஜாவை மனதில் நினைத்துக் கொண்டு 9 முறை கூறவும்

எமன் காயத்ரி மந்திரம்
ஓம் சூரிய புத்ராய வித்மஹே
மகா காலாய தீமஹி
தந்நோ யம ப்ரசோதயாத்


பொருள் :
சூரிய பகவானின் புத்திரரான, காலத்தின் அம்சமான எம தர்மராஜனின் அருள் கிடைக்க, அவரின் பாதம் பணிகிறேன் என்பது தான் இதன் அர்த்தம்.

இந்த மந்திரம் சொல்வதோடு, சனிக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று, அங்கு நவகிரக சன்னதியில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி சனி பகவானின் சகோதரன் எமனுக்குரிய இந்த மந்திரத்தை கூறி வழிபட, மரண பயம் நீங்கி ஆயுள் நீடிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்