ஆப்நகரம்

சனிப் பிரதோஷம் அன்று வரும் மகா சிவராத்திரி: என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

மகா சிவராத்திரி (mahashivratri)அன்று செய்யக்கூடாதவை என சில விஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. 2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் கூடுதல் சிறப்பாக சிவனுக்குரிய புண்ணிய காலமான சனிப்பிரதோஷமும், பெருமாள் வழிபாட்டிற்குரிய திருவோணம் நட்சத்திரமும் இணைந்து வருகிறது. இதனால் இந்த நாள் சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, பெருமாளை வணங்குவதற்கும் ஏற்ற நாளாக உள்ளது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 15 Feb 2023, 8:32 pm
மகா சிவராத்திரி நாளில் எந்த கோவிலில் சென்று வழிபட்டாலும் அதன் பலன் பல மடங்காக கிடைக்கும். இந்த நாளில் செய்யப்படும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். மகா சிவராத்திரி நாளில் விரதம் (maha shivratri vratham) இருந்து சிவனை வழிபட்டால் வாழ்நாள் முழுவதிலும் அனைத்து நலன்களும் கிடைப்பதுடன், மரணத்திற்கு பிறகு மரணமில்லாத பெருவாழ்வு கிடைக்கும்.
Samayam Tamil mahashivratri pooja dos and dont dos on this auspicious day
சனிப் பிரதோஷம் அன்று வரும் மகா சிவராத்திரி: என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?


சனி பிரதோஷ நாளில் மகா சிவராத்திரி:

திதிகளில் திரியோதசியும், நட்சத்திரங்களில் திருவாதிரையும் சிவ பெருமானை வழிபட மிகவும் உகந்தவைகளாகும். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சிவ ராத்திரியே மகா சிவராத்திரி என போற்றப்படுகிறது. இதே போன்று பிரதோஷ காலம் என்பது சிவ பெருமானையும், அவரது வாகனமான நந்தி தேவரையும் வழிபட மிகவும் உகந்த காலமாகும்.

தினந்தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். இதனை நித்ய பிரதோஷ காலம் என்கிறோம். அதே சமயம் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை மகா சனிப்பிரதோஷம் என போற்றுகின்றோம். ஒரு சனிப் பிரதோஷமானது ஆயிரம் சாதாரண பிரதோஷங்களுக்கு சமம். இந்த நாளில் விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

பழனி மகா சிவராத்திரி விழா : பிப்ரவரி 18 பழனியில் இரவு முழுவதும் சிறப்பு பூஜை

மகா சிவராத்திரி பூஜை :

சிவ பெருமானுக்குரிய விரதங்களில் மிகவும் புண்ணியமானதாக கருதப்படும் மகா சிவராத்திரியும் (maha shivratri pooja), அனைத்து விதமான தோஷங்கள், துன்பங்கள் ஆகியவற்றையும் நீக்கக் கூடிய தன்மை கொண்ட மகா சனிப்பிரதோஷமும் இந்த ஆண்டு ஒரே நாளில் வாய்க்கிறது. இது மிகப் பெரிய அரிய புண்ணிய காலமாக ஆன்மிகவாதிகளால் போற்றப்படுகிறது. கிட்டதட்ட ஓராண்டாக தவம் போல் மேற்கொண்ட சிவ வழிபாட்டிற்கு வரம் பெறும் காலமாக இந்த ஆண்டு பிப்ரவரி 18 ம் தேதி வரும் மகா சிவராத்திரி பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் என்ன செய்தால் சிவனின் அருளை முழுவதுமாக பெற முடியும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மகா சிவராத்திரியில் செய்ய வேண்டியவை :

* அதிகாலையில் நீராடி, விளக்கேற்றி சிவனை வழிபட்டு, திருநீறு அணிய வேண்டும்.

* நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவனின் நாமங்களை சொல்ல வேண்டும்.

* கோவிலுக்கு சென்று சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

* சிவ பூஜை செய்ய முடியாதவர்கள், கோவில்களில் இரவு முழுவதும் நடைபெறும் சிவ பூஜையில் கலந்து கொள்ளலாம்.

மகா சிவராத்திரி விரதம் : இரவில் கண் விழிப்பதும், சதுர்தசி திதியில் சிவராத்திரி விரதம் இருப்பது ஏன்?

கண்டிப்பாக செய்ய வேண்டியவை :

* முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

* சிவனுக்கு நடைபெறும் நான்கு கால பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

* கோவில்களில் விளக்கேற்றி, இறை நாமங்களை சொல்லலாம்.

* இரண்டு வில்வ இலைகளையாவது சிவனுக்கு சாத்தி வழிபட வேண்டும்.

* முடிந்த வரை பஞ்சாட்சர மந்திரத்தையும், சிவ மந்திரங்களையும் சொல்ல வேண்டும்.

மாசி மகம் 2023 எப்போது ? விரதம், வரலாறு, பாவங்கள் தீரும் வழி இதோ!

மகா சிவராத்திரி அன்று செய்யக் கூடாதவை :

* மகா சிவராத்திரியன்று சிறிதளவு தண்ணீர் விட்டாவது அபிஷேகம் செய்யப்படாமல் சிவ லிங்கத்தை காய்ந்த நிலையில் வைக்கக் கூடாது.

* வீட்டில் பூஜை செய்து வழிபடாமல் கோவிலுக்கோ, குல தெய்வம் கோவிலுக்கோ செல்லக் கூடாது.

* மகா சிவராத்திரியன்று பகலில் தூங்கக் கூடாது.

* சிவராத்திரியன்று இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக பிப்ரவரி 18 ம் தேதியோ அல்லது பிப்ரவரி 19 ம் தேதியோ பகலில் தூங்கக் கூடாது.

* இரவில் கண்விழிக்கிறேன் என்பதற்காக மொபைலில் வீடியோ கேம் விளையாடு, சினிமா பார்ப்பது, வீண் பேச்சுக்களில் பொழுதை கழிப்பதோ செய்யக் கூடாது.

* கோவில்களில் அன்னதானம் வழங்குகிறேன் என்ற பெயரில் உபவாசம் இருந்து, கண் விழித்து இறை சிந்தனையில் இருப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

* தானமாக தரும் உணவை வாங்கி வீணடிக்கவோ, கோவில்களை அசுத்தம் செய்யவோ கூடாது.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்