ஆப்நகரம்

கிருத்திகை விரதம் அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகப் பெருமானுக்கு 6 வகையான நைவேத்தியங்கள், 6 வகையான மலர்கள், 6 வகையான மந்திரங்கள் சொல்லி, 6 விதமான பூஜைகள் செய்து வழிபட வேண்டும். இதற்கு சண்முக அர்ச்சனை என்று பெயர். முருகனின் ஆறு முகங்களுக்கும் செய்யப்படும் இந்த அர்ச்சனையில் ஒவ்வொரு நைவேத்தியம் படைக்கும் போதும் கந்தர் அலங்காரம் நூலில் உள்ள ஒவ்வொரு பாடலை சொல்லி அர்ச்சித்து வழிபட வேண்டும். இந்த பாடலும் முருகனின் மனதை குளிர செய்யும் சக்தி வாய்ந்த பதிகங்களாகும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 28 Jan 2023, 7:56 pm
ஒவ்வொரு நைவேத்தியம் படைத்த பிறகு, அந்த அர்ச்சனைக்குரிய மலர்களால், அதற்குரிய கந்தர் அலங்கார பதிகத்தை பாராயணம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
Samayam Tamil pusam


தை கிருத்திகையன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள் :

முதல் அர்ச்சனை பாடல்:

பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

உயர் பதவி கிடைக்கச் செய்யும் தை கிருத்திகை விரதம் : முருகனை எப்படி வழிபட வேண்டும்?

இரண்டாவது அர்ச்சனை பாடல்:

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.

மூன்றாவது அர்ச்சனை பாடல்:

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.

நான்காவது அர்ச்சனை பாடல்:

மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.

பீஷ்மாஷ்டமிக்கும் எருக்கம் இலை நீராடலுக்கும் என்ன தொடர்பு ?

ஐந்தாவது அர்ச்சனை பாடல்:

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

ஆறாவது அர்ச்சனை பாடல்:

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

கிருத்திகை விரதம் எதற்காக இருக்க வேண்டும்? - முக்கிய சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

குழந்தைப்பேறு கிடைக்க படிக்க வேண்டிய பதிகம்:

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்