ஆப்நகரம்

செவ்வாய் கிழமையில் நல்ல காரியங்களை தவிர்ப்பது ஏன்?

பல பழக்கங்கள் அல்லது மூட நம்பிக்கைகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கிராமங்களில் பெரியவர்களாலும் சொல்லப்பட்டு வருகிறது. அவற்றில் பலவற்றை சரியான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நாமும் பின்பற்றி வருகிறோம். அப்படி ஒன்று தான் செவ்வாய் கிழமையில் நல்ல காரியங்கள் ஏதும் செய்யக் கூடாது. அப்படி மீறி செய்தால் அந்த காரியம் சரியாக அமையாது என்பது. ஆனால் இதற்கு என்ன காரணம் என யாரும் சொல்லுவது கிடையாது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 13 Mar 2023, 8:00 pm
எதற்காக செவ்வாய் கிழமையில் நல்ல காரியங்களை தவிர்க்க வேண்டும்? இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம். மங்களகாரகன், மங்கள்வார் என சொல்லப்படும் செவ்வாய் கிழமையில் மங்கள காரியங்கள் தவிர்க்கப்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil reason for avoiding tuesday as inauspicious day
செவ்வாய் கிழமையில் நல்ல காரியங்களை தவிர்ப்பது ஏன்?


செவ்வாய் கிழமை பற்றி மக்களின் கருத்து :

பொதுவாக ஒரு வாரத்தில் மங்களகரமான நாள், வழிபாட்டிற்கு உரிய நாள் என்றால் அது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளை தான் நாம் சொல்வோம். ஆனால் நல்ல காரியங்கள் செய்வதற்கு என்று வரும் போது வெள்ளிக்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களை தான் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள். செவ்வாய் கிழமையில் ஒரு காரியங்கத்தை துவங்கினால் அது சரியாக வராது என்ற கருத்து பல காலமாக நிலவி வருகிறது.



இதனால் செவ்வாய்கிழமையில் நல்ல காரியங்களை செய்யலாமா? கூடாதா? செவ்வாய்கிழமை எந்தெந்த காரியங்களை செய்யலாம்? எந்தெந்த காரியங்களை செய்யக்கூடாது? என்ற குழப்பமும் சந்தேகமும் பல காலமாக நிலவி வருகிறது. ஆனால் எதற்காக செவ்வாய் கிழமையில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்கு சரியான காரணம் அல்லது விளக்கம் தெரியாது.

காமாட்சி விருத்தம் : காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தவிர்க்கப்படும் செவ்வாய் :

புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவதாக இருந்தாலும் சரி, ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் சரி செவ்வாய்கிழமையை பலரும் தவிர்க்கிறார்கள். செவ்வாய்கிழமையில் புதிய ஆடைகள் உடுத்தினாலோ அல்லது வாங்கினாலோ சரியாக இருக்காது. அதுவே புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிய ஆடை, ஆபரண ஆகியவற்றை வாங்கினால் செல்வம் சேரும், மங்கலங்கள் பெருகும் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு உண்மையான காரணம் என்னவென்று பார்ப்போம்.

மாசி சங்கடஹர சதுர்த்தி : தீர்க்க சுமங்கலி வரம் தரும் கணபதி வழிபாடு

​செவ்வாயின் குண நலன் :

ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தை மங்களகாரகன் என்று அழைக்கின்றனர். செவ்வாய் பகவான் போரின் கடவுளாகவும், பூமா தேவியின் மகன் என்றும் அழைக்கப்படுகிறார். இரக்க குணமும், ஆளுமை திறனும் உடையவர். முருகப் பெருமானுக்கு உகந்த நாளும் செவ்வாய்கிழமை தான். செவ்வாய் பகவான், முருகப் பெருமான், பூதேவி ஆகியோரை வழிபட்டு செவ்வாய்கிழமையில் மங்கலப் பொருட்கள் வாங்கினால் செல்வம் பல மடங்கு பெருகும். எல்லா விதமான சிறப்புக்களும் தேடி வரும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோடை வசந்த உற்சவம் மார்ச் 27 ல் துவக்கம்

​செவ்வாய் கிழமை தவிர்க்கப்படுவது ஏன்?​

செவ்வாய் கிரகத்தின் குணங்களாக கூறப்பட்டுள்ள விஷயங்களில், செவ்வாய் பகவான் விசுவாசம் நிறைந்த பணியாளராக இருக்கக் கூடியவர். அதே சமயம் மூர்க்க குணம் நிறைந்தவர் ஆவார். இதனால் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் தடாலடியாக வேகமாக செயல்படக் கூடியவர். இதனால் செவ்வாய் கிழமையில் துவங்கப்படும் காரியங்களுக்கு வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், பின் விளைவுகளால் பாதிப்புக்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கை காரணமாகவே செவ்வாய் கிழமையில் நல்ல காரியங்கள் துவங்குவதை மக்கள் தவிர்க்கக் ககாரணம் ஆகும்.

​செவ்வாய் கிழமையில் என்ன செய்யலாம்?​

செவ்வாய் கிழமையில் கடனை திருப்பி செலுத்தினால், விரைவில் மொத்த கடனும் அடைக்க வழி பிறக்கும். அதே போல் செவ்வாய் கிழமையில் மெளன விரதம் இருப்பது யாகம் செய்ததற்கு இணையான பலனை பெற்றுத் தரும். அதே சமயம் செவ்வாய் கிழமையில் விவாதங்களில் ஈடுபட்டால் அது தீமையில் முடியும். அதனால் தான் செவ்வாயோ, வெறு வாயோ என்ற பழமொழி சொல்லப்படுகிறது.கிழக்கு திசையில் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் செவ்வாய் கிழமையில் மேற்கொண்டால் அது நிச்சயம் வெற்றியை தரும்.

செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரம், துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திர அடிப்படையில் செய்யப்படும் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பூமி பூஜை ஆகியவற்றை செவ்வாய் கிழமையில் மேற்கொள்ளலாம். தோஷ பரிகார பூஜைகள் செய்வதற்கும் செவ்வாய் கிழமை உரிய நாளாகும்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்