அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம், நன்மை பெறலாம் என்பார்கள். அனுமனை கண்டால் சனீஸ்வரனுக்கு அப்படி பயம், மரியாதை? அனுமன் பக்தர்களை சனி பகவான் ஒன்றும் செய்வதில்லை என்பதற்கு என்ன காரணம்? அதற்கு பின்னயாக அமைந்த சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அனுமனிடம் சனிக்கு என்ன பயம்?
அனுமனை ஏழரை சனி பிடித்த கதை :
ராமாயணத்தில் ராவணனிடம் சிறைபட்டிருக்கும் சீதா பிராட்டியை மீட்பதற்கு ராமனுக்கு, சுக்ரீவன், அனுமன் உள்ளிட்ட வானர சேவைகள் உதவி செய்து கொண்டிருந்தன. இலங்கையை அடைவதற்காக சேது பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. குரங்கு கூட்டம் தங்களால் முடிந்த சிறிய மற்றும் பெரிய கற்களை கடலில் வீசிக் கொண்டிருந்தன. சில வானரங்கள் மரங்களை பெயர்த்தி எடுத்து வந்து போட்டுக் கொண்டிருந்தன.
பிப்ரவரியில் திருப்பதி போக போறீங்களா? இந்த தேதிகளை குறிவைத்துக் கொள்ளுங்கள்
முடிந்தால் அனுமனை பிடித்துக் கொள்ளுங்கள் :
சனீஸ்வரனுக்கு அனுமன் தந்த பதில் :
ராம - லட்சுமணரிடம் விடை பெற்று அனுமனிடம் சென்ற சனீஸ்வரன், "அனுமனே வணங்குகிறேன். தங்களை ஏழரை சனி பிடிக்கும் காலம் நெருங்குகிறது. அதனால் உங்களை பிடித்துக் கொள்ள உங்கள் உடலில் ஏதாவது ஒரு இடத்தை கொடுங்கள்" என கேட்டுள்ளார். அதற்கு அனுமனோ, "சனீஸ்வரனே! நான் தற்போது சீதா தேவியை மீட்பதற்காக ராமனுக்கு உதவியாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த பணிகள் முடிந்து சீதா தேவியை மீட்ட பிறகு நானே உங்களைத் தேடி வருகிறேன். அப்போது என் உடல் முழுவதையும் கூட நீங்கள் பிடித்துக் கொள்ளலாம்" என்றார்.
"அஞ்சனை மைந்தனே...சிவ பெருமானின் மறு உருவமே...தாங்கள் அறியாதது அல்ல. எதற்கும் ஒரு கால வரையறை உள்ளது. அதற்கு நீங்களோ, நானோ யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதனால் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் உங்களுடைய உடலில் எந்த பாகத்தை நான் பிடிக்க வேண்டும் என சொல்லுங்கள்" என்றார் சனீஸ்வரன்.
வாரணம் ஆயிரம் : விரைவில் திருமணம் நடைபெற சொல்ல வேண்டிய பதிகம்
சனிக்கு தலையில் இடம் தந்த அனுமன் :
சனிக்கே ஏழரை சனி பிடித்ததா? :
அதுவரை சிறிய பாறைகளை தூக்கிச் சென்ற அனுமன், சனீஸ்வரன் தனது தலை மீது ஏறிக் கொண்ட பிறகு பெரிய பெரிய மலைகளை புரட்டி, தனது தலையில் சுமர்ந்து எடுத்துச் சென்று கடலில் போட துவங்கினார். அனுமனின் தலையில் அமர்ந்திருந்ததால் மலைகளின் பாரத்தை சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாயிற்று. தனக்கே ஏழரை சனி பிடித்து விட்டதோ என்ற சந்தேகம் வந்து விட்டது சனீஸ்வரனுக்கு. ஒரு கட்டத்தில் மலைகளின் பாரத்தை தாங்க முடியாமல் அனுமனின் தலையில் இருந்து கீழே இறங்கி விட்டார் சனீஸ்வரன்.
முருகனை ஏன் சுப்ரமணியன் என்ற அழைக்கிறோம் தெரியுமா?
தோல்வி அடைந்த சனி பகவான்:
அனுமனுக்கு சனி கொடுத்த வரம் :
ஆஞ்சநேயருக்கு அளித்த வரத்திற்கு கட்டுப்பட்டே, அனுமனை வணங்குபவர்களையும், ராம நாமத்தை சிந்திப்பவர்களையும் சனியின் கெடு பார்வை ஒன்றும் செய்வதில்லை. சனியின் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், அனுமனை வழிபட்டு ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்து வந்தால் எந்த சூழலிலும் அவர்களை எந்த துன்பங்களும் நெருங்காது.