ஆப்நகரம்

ருத்ராட்சம் அணிந்தால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா?

ருத்ராட்சம் ஆணிவது ஆன்மிக காரணங்களை கடந்து அறிவியல் உண்மைகளும், பலன்கள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 15 Feb 2024, 1:43 pm
ருத்ராடசத்தை அணிந்தால் பல்நன்மைகள் விளையும் என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அதை அணிவதன் மூலமும், அதை ஆராதிப்பதன் மூலமும் பல்வேறு நன்மை நடப்பதை நீங்களே உணர முடியும்.
Samayam Tamil rudraksha

அறிவியல் உண்மை:

ருத்ராட்சம் சித்தர்கள் கண்டறிந்த ஒரு மகத்தான மூலிகையாக பார்க்கப்படுகின்றது. இது நம் உடலோடு ஒட்டி இருக்க கிருமிகளை அழித்து, சக்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல வித நோய்களிலிருந்து காக்க வல்லது.

எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?


எதிர்மறை எண்ணங்கள் அழியும் :

உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, உள்ளத்திற்கான மன தைரியத்தை தர வல்லது. நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியது.

நாம் ருத்ராட்சத்தை அணிந்திருதால் ஒரு செயல் தொடங்கும் போதே அது வெற்றி அடையுமா இல்லையா என்பது நம் மனதிற்கு தெரிந்துவிடும். அதை தெரிவிக்க வல்ல சக்தியை தரும் இந்த ருத்ராட்சம்.

ருத்ராட்சம் உண்மையானதா, போலியானதா எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?


யார் எல்லாம் அணியலாம் :

கூடியது அற்புதங்களை கொண்ட ருத்ராட்சத்தை யார் வேண்டுமானலும் அணியலாம். அகிலாண்டேஸ்வரியே அணிந்து காட்சி தருகின்றாள்

குழந்தைகளுக்கான பலன்கள் :

சிறு குழந்தைகள் முதல் ருத்ராட்சத்தை அணிந்து வர அவர்களின் கல்வியில் வியத்தகு முன்னேற்றத்தை காண முடியும். படிப்புக்கு தேவையான மனதை ஒரு நிலை படுத்தக் கூடிய சக்தி மிக்கது. அதோடு ஞாப சக்தியை தரக் கூடியது.

ஆண் / பெண்களுக்கான பலன்கள் :

ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அணியலாம். இதை அணிவதன் மூலம் மன தூய்மை கிடைக்கும். எந்த ஒரு செயலை செய்வதற்குமான தெளிவும், ஆற்றலும்கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை தரக் கூடியதாக இருக்கிறது. உடல், உள்ள தூய்மையை தரவல்லது.


ருத்ராட்சத்தை பராமரிக்கும் முறைகள்!

எப்படி அணிவது, யார் அணிவிப்பது?

ருத்ராட்சம் என்பது ஒரு குரு போன்றது. நமக்கான வழிகாட்டுதலை தருவதால் நாம், கருப்பு நிற கயிறில் கோர்க்கப்பட்ட ருத்ராட்சத்தை குருவிடம் கொடுத்து அணிந்து கொள்ளலாம். அல்லது நாமே ‘ ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து அணிந்து கொள்ளலாம்.


கங்கையில் குளித்த பலன்

ருத்ராட்சம் அனிந்து குளிப்பதால், அதில் பட்டு நம் உடலில் படும் நீர் கங்கை நீருக்கு ஈடாக பார்க்கப்படுகிறது. கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.


ருத்ராட்சத்தை கலற்றலாமா?

நாம் ருத்ராட்சத்தை அணிந்திருந்தால் அதை இரவு நேரம் நாம் கலற்றி வைக்கலாம். காலையில் குளித்து இறை வழிபாடு செய்து அணிந்து கொள்ளலாம்.
பல்வேறு காரணங்களுக்காக நாம் ருத்ராட்சத்தை கலற்ற நேரிடலாம், ஆனால் அதை அணிந்து கொண்டிருப்பதே சிறப்பு எனப்படுகிறது. ருத்ராட்சத்தை கலற்றினாலும், அதை மீண்டும் அணிய எல்லா நன்மைகளும் வந்து சேரும். நம் பாவங்கல் பரந்தோடும்.
அப்படியே கலற்றினாலும், குளிக்கும் போதாவது அதை அணிந்து கொண்டு அதன் பலன்களை பெறுவது உத்தமம்.
ஓம் நமச்சிவாய...
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்