ஆப்நகரம்

சனி ஜெயந்தி 2023 : ஜேஷ்ட அமாவாசை அன்று பெண்கள் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் ?

எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசை, பெளர்ணமி நாட்கள் வழிபாட்டிற்கு உரிய விசேஷ நாட்கள் என்றாலும், சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் கூடுதல் சிறப்பை பெறுகின்றன. மே மாதத்தில் ஜேஷ்ட அமாவாசை, சனி ஜெயந்தி ஆகியோன ஒரே நாளில் வருவதால் முன்னோர்களின் ஆசியும், சனி பகவான், மகாவிஷ்ணு மற்றும் சிவ பெருமானின் அருளும் கிடைக்கும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 17 May 2023, 12:21 pm
ஜேஷ்ட அமாவாசை நாளில் புனித நதிகளில் நீராடினால் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் கண்டிப்பாக தர்ப்பணம் செய்வது முன்னோர்களை சந்தோஷப்படுத்தி, அவர்களின் ஆன்மாவை மனம் குளிரச் செய்யும்.
Samayam Tamil shani jayanti 2023 puja rules for women on jyeshtha amavasya
சனி ஜெயந்தி 2023 : ஜேஷ்ட அமாவாசை அன்று பெண்கள் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் ?


ஜேஷ்ட அமாவாசை 2023 :

வைகாசி மாதத்தில் வரும் அமாவாசையை ஜேஷ்ட (ஜ்யேஷ்தா அல்லது ஜயேஷ்ட) அமாவாசை என்பார்கள். இந்த நாளிலேயே சனி பகவான் அவதரித்ததால் இதை சனி ஜெயந்தி என்றும், சனி அமாவாசை என்றும் அழைக்கிறார்கள். இது முன்னோர் வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாளாகும்.



இந்த நாளில் முன்னார்களுக்கு தர்ப்பணம் அளிப்பதும், தான தர்மங்கள் செய்வதும், பூஜைகள், வழிபாடுகளில் ஈடுபடுவதும் பல மடங்கு அதிகமான பலன்களை தரும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகியவற்றிற்கு இணையாக ஜேஷ்ட அமாவாசையும் கருதப்படுகிறது. இந்த நாளில் நவகிரகங்களில் பலம் வாய்ந்த கிரகமாக கருதப்படும் சனி பகவானையும் வழிபடுவதால் கிரக தோஷங்கள் உள்ளிட்ட தோஷங்கள் விலகும்.

சிவராத்திரி நாளில் வரும் புதன்வார பிரதோஷம் : எப்படி வழிபட்டால், என்ன பிரச்சனை தீரும் ?

சனி ஜெயந்தியில் ஜேஷ்ட அமாவாசை :

இன்றைய தினம் சனி பகவான் அவதரித்த நாள் என்பதால் பீகார், அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெண்கள் இதனை வத் சாவித்ரி விரதமாக அனுஷ்டிக்கிறார்கள். சனி பகவான் ஆயுள்காரகன் என்பதால் தங்களின் கணவர் நலமுடன், நீண்ட காலம் வாழ வேண்டும் என னேண்டிக் கொண்டு பெண்கள் விரதம் இருந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு சனி ஜெயந்தி, சனி அமாவாசை, ஜேஷ்ட அமாவாசை என பல பெயர்களால் போற்றப்படும் இந்த நாள் மே 19 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. மே 18 ம் தேதி இரவு 09.42 மணிக்கு துவங்கி, மே 19 ம் தேதி இரவு 09.22 வரை அமாவாசை திதி உள்ளது.

திருச்சானூரில் தெப்ப உற்சவம் : 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து

சனி வழிபாடு :

ஜேஷ்ட அமாவாசை முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை வேண்டும் நாளாகும். இந்த நாளில் பக்தர்கள் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடல், கோவில் குளங்களிலும் புனித நீராடுவதை பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். இந்த புண்ணிய நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானின் மகனான சனி பகவான், நீதி மற்றும் கர்மாக்களின் கடவுளாக கருதப்படுகிறார்.

சனி பகவான் அவதரித்த சனி ஜெயந்தி நாளில், எள் தீபம் ஏற்றி அவரின் அருளை பெற வழிபட வேண்டும். ஒருவர் செய்யும் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கக் கூடியவர் சனி பகவான் ஆவார். இந்த நாளில் "ஓம் ஷம் ஷனீஸ்வராய நம:" என்ற மந்திரத்தை சொல்லி அவரை வழிபட வேண்டும்.

சித்தர்கள் சொன்ன சனி விரதம் இருக்கும் முறைகள்

பெண்கள் வழிபட வேண்டிய முறை :

ஜேஷ்ட அமாவாசை நாள், சாவித்திரி விரதம் மேற்கொள்ள மிகவும் உகந்த நாளாகும். திருமணமான பெண்கள் அனைவரும் இந்த நாளில் விரதம் இருந்து, ஆல மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். தங்களின் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்கிறார்கள். பொதுவாக திருமணமான சுமங்கலி பெண்கள் அமாவாசை விரதம் கடைபிடிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஜேஷ்ட அமாவாசை நாளில் தங்களின் கணவரின் நலன் வேண்டி, பெண்கள் சாவித்ரி விரதம் இருக்கிறார்கள். இந்த நாள் பீகார். உத்திர பிரதேசம், மத்திய பிரதோசம், மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஜேஷ்ட அமாவாசை விரத முறைகள் :

* இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து, புனித நீராட வேண்டும்.

* சிலர் கங்கை போன்ற புனித நதிகளில் சென்று நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

* அமாவாசை நாளில் சூரிய பகவானுக்கு நீரை சமர்ப்பித்து வழிபடுவது மிக முக்கியமானதாகும்.

* அமாவாசை நாளில் செய்யப்படும் தான, தர்மங்கள் மிகப் பெரிய புண்ணிய பலன்களை சேர்க்கும்.

* அந்தணர்களுக்கு உணவு மற்றும் ஆடைகள் வழங்குவது, பசியில் தவிப்போருக்கு அன்னதானம் வழங்குவது ஆகியன சிறப்பானதாகும்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்