ஆப்நகரம்

சங்கடஹர சதுர்த்தியன்று சொல்லவேண்டிய எளிய ஸ்லோகம்!

கணபதிக்கும் மிகவும் உகந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் சொல்ல வேண்டிய முக்கிய ஸ்லோகத்தை இங்கு தெரிந்து கொள்வோம்...

Samayam Tamil 7 Aug 2020, 7:36 am
வினை தீர்ப்பான் விநாயகர் என்பார்கள். அதிலும் குறிப்பாக நாம் விநாயகருக்குக்கு மிகவும் உகந்த அவர் அவதரித்த சதுர்த்தி திதி நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து சங்கடங்களும் விலகி நாம் வேண்டக் கூடிய வரங்களை வாரி வழங்கக் கூடியவர் நம் விநாயகர்.
Samayam Tamil sankatahara chaturthi
sankatahara chaturthi


அப்படிப்பட்ட உன்னத தினமான மஹா சங்கடஹர சதுர்த்தி தினம் இன்று. இன்று நாம் விரதமிருந்து, விநாயகரை அருகம்புல் மாலையை சாற்றி, அருகம்புல அர்ச்சனை செய்வதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

விநாயகரின் 16 பெயர்களின் பொருள் தெரியுமா?

அதோடு கீழே குறிப்பிட்டுள்ள பாடலை சங்கடஹர சதுர்த்தி அன்று பாடி வருவது நல்லது.

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய |
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய ||
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது |
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா ||

எல்லா கடவுளும் ஃபிட்டா இருக்கறப்போ ஏன் விநாயகர் மட்டும் தொந்தியோட இருக்கார்? அதோட ரகசியம் தெரியுமா?

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த ஸ்லோகத்தை நாம் மனதார கூறிவருவதன் மூலம் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய தடைகள் நீங்கும். பொருளாதாரம் உயர்ந்து கடன் தொல்லை தீரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்