ஆப்நகரம்

Solar Eclipse 2019: சூரிய கிரகணம் 2019 எப்போது? - திருப்பதி, சபரிமலை ஐயப்பன் கோயில் அடைக்கப்படும் விபரம் இதோ...

சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி நடக்க உள்ளது. எந்தெந்த பகுதிகளில் கிரகணம் தெரியும், கோயில் நடை சாற்றப்படும் விபரங்களைப் பார்ப்போம்...

Samayam Tamil 24 Dec 2019, 12:24 pm
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என கிரகணங்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று முறை நடக்கும் இயற்கையான ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வுவின் ஒரு பகுதியாக இந்தாண்டு இரண்டாவது சூரிய கிரகணம் மற்றும் இந்த ஆண்டு கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நடக்க உள்ளது. இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற பெரிய பிரபலமான கோயில்கள் கிரகணத்தின் போது எவ்வளவு மணி நேரம் நடைசாத்தப்படும் என தெரிவித்துள்ளன.
Samayam Tamil solar eclipse
சூரிய கிரகணம்


இந்த பதிவில் சூரிய கிரகணம் என்றால் என்ன, அப்போது செய்ய வேண்டிய செயலும், செய்யக் கூடாதவையும் தெரிந்து கொண்டு அதன் படி எப்படி நம் வாழ்வை வளமுறுத்திக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.

சூரிய கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி, நட்சத்திரங்கள்... எளிய பரிகாரம் இதோ...

சூரிய கிரகணம்
விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி (26.12.2019) வியாழக் கிழமை உலகளவில் அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது.

Also Read: கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை என ஆன்மிகம், அறிவியல் சொல்லும் உண்மைகள் இதோ!

இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு.
பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும், அமாவாசை அன்று சூரிய கிரகணமும், ஏற்படுவது வழக்கம்.

Surya Grahanam 2019: சூரிய கிரகணம் எப்போது தொடங்குகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்? - எப்படி பார்க்கலாம்?

கோயில் நடை அடைப்பு:
இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் 13 மணி நேரம் அடைக்கப்படும் அதாவது டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலும் டிசம்பர் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்