ஆப்நகரம்

சிவ பெருமானையே பயந்து ஓட வைத்த சனீஸ்வரன்

நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான் தான். சனீஸ்வரனை பார்த்து மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் கூட பயந்து நடுங்கிய கதைகளும், சனியின் பிடியில் சிக்கி படாதபாடு பட்ட கதைகளும் புராணங்களில் உண்டு. அதற்கு காரணம் சனீஸ்வரன் தாங்க முடியாத கஷ்டங்களை, சோதனைகளை தரக்கூடியவர் என்பது தான்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 18 Apr 2023, 3:00 pm
சனீஸ்வரனை பார்த்து மற்ற தெய்வங்கள் மட்டுமல்ல உலகை ஆளும் பரமேஸ்வரனே பயந்து ஓடி, ஒழிந்து கொண்டார் என்ற கதையும் உண்டு. இது சனீஸ்வரன் எப்படிப்பட்ட நீதி தவறாதவர், பாரபட்சம் இன்றி நடக்கக் கூடியவர் என சனீஸ்வரனின் மகிமையை அனைவரும் அறிவதற்காக சிவ பெருமான் நடத்திய திருவிளையாடல்களில் ஒன்றாகும். அந்த கதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil story of lord shiva scared on shaneswara
சிவ பெருமானையே பயந்து ஓட வைத்த சனீஸ்வரன்


சனி பகவான் :

சனீஸ்வரனை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சனியை போல் கெடுப்பவனும் இல்லை. சனியை போல் கொடுப்பவனும் இல்லை என்பார்கள். தேவாதி தேவர்கள் முதல் மனிதர்கள் வரை அனைவரையும் வாழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் பிடித்துக் கொண்டு பல விதமான கஷ்டங்களைக் கொடுத்து, அதன் மூலம் பல விதமான அனுபவங்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும் பக்குவப்பட வைத்துல வாழ்க்கையை புரிய வைக்கக் கூடியவர் சனி பகவான்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2023 : ஏப்ரல் 22 ல் ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

சனீஸ்வரர் பிடிக்காதவர் :

அப்படிப்பட்ட சனி பகவான், ஒரு முறை தேவலோகத்தில் இந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "சனீஸ்வரா! அனைவரையும் பிடித்து பாடாய்படுத்துகிறாயே. உனது பிடியில் சிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?" என கேட்டான் இந்திரன். அதற்கு சற்று யோசித்து பதிலளித்த சனி பகவான், " ஒரே ஒருவர் மட்டும் தான் இருக்கிறார். இப்போது தான் நினைவிற்கு வருகிறது. அவரையும் பிடிக்கும் காலம் வந்து விட்டது" என கூறி விட்டு, வேகமாக கைலாயத்திற்கு சென்றார்.

காளஹஸ்தி கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு சென்றால் ரூ.5000 அபராதம்

சிவனை பிடிக்க வந்த சனி :

சனி பகவான் வேகமாக வருவதை கண்ட சிவ பெருமான், என்ன சனீஸ்வரா இந்த பக்கம்? அதுவும் இவ்வளவு அவசரமாக வந்து கொண்டிருக்கிறாய் என கேட்டார். அதற்கு சிவனை வணங்கி விட்டு பதிலளித்த சனீஸ்வரன், இறைவா! விதிப்படி தற்போது உங்களை பிடிக்க வேண்டும் நேரம் வந்து விட்டது. அதனால் தான் இங்கு வந்தேன் என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவ பெருமான், என்னது என்னையே பிடிக்க போகிறாயா? அந்த விதியை வகுத்தவனே நான் தான். என்னை எப்படி உன்னால் பிடிக்க முடியும்? என்றார்.

அமர்நாத் யாத்திரை 2023 : எப்படி முன்பதிவு செய்வது? முழு விபரம் இதோ

சிவன் விட்ட சவால் :

அதற்கு பதிலளித்த சனி பகவான், விதியை வகுத்த நீங்களே அதை மீறலாமா பரம்பொருளே? உங்கள் அணைப்படி எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற எனக்கு அனுமதி தாருங்கள் என்றார். அதற்கு சிவ பெருமான், ஏழரை ஆண்டுகள் அல்ல ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை பிடிக்க முடியாது. உன்னால் முடிந்தால் என்னை பிடித்துக் கொள் என கூறி விட்டு, பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலைக்குள் சென்று மறைந்து கொண்டார் சிவ பெருமான்.

சிவனே ஓடி ஒழிந்த கதை :

ருத்ராட்ச மாலையை எந்த சக்தியாலும் நெருங்க முடியாது. அதுவும் சிவன் மறைந்திருக்கும், பார்வதியின் கழுத்தில் இருக்கும் ருத்ராட்சத்திற்கு இருக்கும் சக்தியை சொல்லவா வேண்டும்? சிவனே மறைந்திருக்கிறார் என்றால், அந்த ருத்ராட்சம் எத்தகைய பேராற்றல் நிறைந்ததாக இருக்க முடியும்? இதனை சற்று யோசித்த சனி பகவான், அதே இடத்தில் அமர்ந்து நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்க துவங்கி விட்டார்.

சனீஸ்வரரின் மகிமை :

ஏழரை நாழிகை கடந்ததும் ருத்ராட்ச மாலைக்குள் இருந்து வெளியே வந்த சிவ பெருமான், பார்த்தாயா சனீஸ்வரா நான் கூறியது போல் உன்னால் என்னை பிடிக்கவே முடியாது என்றார். இதற்கு கேட்டு அமைதியாக பதிலளித்த சனி பகவான், பரம்பொருளே ! நான் உங்களை பிடிக்கவில்லை. ஆனால் உலக உயிர்கள் அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்துள்ள தங்களை, ஏழரை நாழிகைகள் ஓர் இடத்தில் ஒடுங்கி, ஒரு ருத்ராட்சத்திற்குள் சிறை இருக்கும் படி செய்து விட்டேனே. இதுவே நான் தங்களை பிடித்ததற்கு சமம் தான் என்றார்.

விதியை வகுத்தவனாக இருந்தாலும் தர்ம நெறி தவறாது விடாபிடியாக இருந்து தன்னையும் பிடித்த சனீஸ்வரனை சிவ பெருமானும், பார்வதி தேவியும் வாழ்த்தினர்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்