ஆப்நகரம்

சுதர்சன மகா மந்திரத்தின் மகிமையும், அதை சொல்லும் முறையும்

திருமாலின் ஆயுதமாக இருக்கும் சக்கரமான சுதர்சன சக்கரத்தை வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். சாளகிராமத்தால் ஆன சுதர்சனம் மிகவும் சிறப்பானது. திருமாலின் சக்ராயுதத்தின் அனைத்து சக்திகளும் இதற்கு உண்டு என சொல்லப்படுகிறது. இதனால் சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு எதிரிகள் பயம் இருக்காது, தொழில்கள் சிறக்கும் என்பது நம்பிக்கை.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 10 Mar 2023, 4:01 pm
சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறமுள்ள யோக நரசிம்மரையும் வணங்கி, வலம் வந்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஜஅட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும், 16 விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பார்கள். சக்கரத்தாழ்வாரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் துளசி மற்றும் தாமரை சாத்தி வழிபடுவது மிகவும் விசேஷமானது.
Samayam Tamil sudarshana maha mantra glory and its importance
சுதர்சன மகா மந்திரத்தின் மகிமையும், அதை சொல்லும் முறையும்


சக்கரத்தாழ்வார் வழிபாடு :

மகா விஷ்ணுவின் அடையாளமாக சொல்லப்படுவது அவரது கையில் இருக்கும் சங்கும், சக்கரமும் தான். இந்த சக்கரம் தீமைகளை அழித்து, நல்லவைகளை காக்கக் கூடியது. இந்த சுதர்சன சக்கரம் மகாவிஷ்ணுவின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.



மகாவிஷ்ணுவின் ஆயுதமாக இருக்கும் இந்த சக்கரம் ஆழ்வார்களுள் ஒருவராகவும் போற்றப்பட்டு, சக்கரத்தாழ்வார் (chakkarathalvar)என உயர்வாக பூஜிக்கப்படுகிறது. சுதர்சனர், திருவாழியாழ்வான், திகிரி என பல பெயர்களால் சுதர்சன சக்கரத்தை நாம் அழைக்கிறோம். சக்கரத்தாழ்வார் சில இடங்களில் 16 கரங்கள் கொண்டவராகவும், சில இடங்களில் 32 கரங்கள் கொண்டவராகவும் காட்சி தருகிறார்.

மாசி சங்கடஹர சதுர்த்தி : தீர்க்க சுமங்கலி வரம் தரும் கணபதி வழிபாடு

​சக்கரத்தாழ்வார் வழிபாட்டு பலன்கள் :​

சங்கடங்களை போக்கு, மங்காத செல்வத்தை தரக்கூடியவர் சக்கரத்தாழ்வார். இவரை வணங்குவதால் பயம், தோஷங்கள், துன்பங்கள் அழியும், செல்வம் பெருகும். அவருக்குரிய மகா சுதர்சன மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் அனைத்து விதமான பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்துக்கள் விலகும், எதிரிகள் விலகுவர், தைரியம் கூடும். மகிழ்ச்சி நிலைக்கும்.

சிவன்மலை உத்தரவு பெட்டியில் 10 நாளில் மாறிய பூஜை பொருள் : என்ன நடக்கும் என காத்திருக்கும் பக்தர்கள்

​சுதர்சனரின் 16 ஆயுதங்கள் :​

பெருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். சக்கரத்தாழ்வார் தனது 16 கரங்களிலும் 16 விதமான ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வலது புறம் உள்ள கைகளில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்கனி, மிஸ்கிரிசம், வேல் ஆகியனவும், இடது கையில் பாஞ்ச சண்யம், சாரங்கம், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை கொண்டுள்ளார்.

பெருமாளின் கையில் இருக்கும் சக்கரம் பெருமாளுக்கு இணையாக கருதப்படுவதால் சுதர்சன ஹோமம், சுதர்சன மந்திரம் ஆகியன மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுதர்சன மந்திரம் உச்சரிக்கப்படும் இடத்தில் தீமைகள், எதிரிகள் இருக்காது என்பது நம்பிக்கை.

யுகாதி பண்டிகை 2023 எப்போது ? உகாதி பண்டிகையின் சிறப்புக்களும், கொண்டாடும் முறையும்

​சுதர்சன காயத்ரி மந்திரம் :

ஸூதர்ஸநாய வித்மஹே ஜ்வாலா - சக்ராய
தீமஹி தந்ந : சக்ர: ப்ரசோதயாத்

சுதர்சனர் மூல மந்திரம் :

ஓம் ஸ ஹ ஸ்ரா ர ஹூம் பட்

மகா சுதர்சன மந்திரம் :

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய
பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி

ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய
மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே
ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபனா
கராய ஹூம்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

​சுதர்சன மந்திரம் சொல்லும் முறை :

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மகா சுதர்சன மந்திரத்தை தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து விட்டு, சுத்தமான ஆடை உடுத்தி, கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்களை மூடி குறைந்த பட்சம் ஒன்பது முறை உச்சரிக்க வேண்டும். 108 முறை உச்சரிப்பது மிகவும் சிறப்பான பலனை கொடுக்கும். அனைத்து விதமான நன்மைகளையும் தரும். அஞ்ஞானம் விலகி, ஞானம் பிறக்கும்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்