ஆப்நகரம்

Brihadisvara Temple : பெரிய கோயில் கட்டிய ராஜராஜனுக்கு இறைவன் காட்சி தந்து அருளிய அதிசய கதை தெரியுமா?

தஞ்சை பெரிய கோயில் மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் சிவங்கை பூங்காவில் உள்ள சிறு கோயில் இறைவனுக்கு ஏன் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்... Brihadisvara Temple Kumbhabhishekam

Samayam Tamil 5 Feb 2020, 6:49 pm
இன்று வெகு விமர்சையாக தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் முடிந்துவிட்டது. இதேபோல் புதிதாக கோயிலைக் கட்டியவுடன் நடந்த கும்பாபிஷேகத்திற்குப் பின் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு என்ன என்பது இங்கு பார்ப்போம்.
Samayam Tamil Brihadisvara Temple, Thanjavur
தஞ்சை பெரிய கோயில்


அரசன் இராஜராஜன் தஞ்சை பிரகதீஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் முடித்த பின்னர் அன்று இரவு, ஒரு பெரிய பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில் , “உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்” என இறைவனின் குரல் அசரீரியாக கூறிசென்றது.

தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்

மறுநாள் விடிந்ததும், அமைச்சரை அழைத்த அவர் அசரீரி சொன்னதன் பொருள் என்ன என வினவினான்.

அமைச்சரோ, ‘உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்’ என்பது பொருளாகும். ‘இடைச்சியின் நிழல்’ என்பது இடைச்சியின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கல் கோபுரத்தின் மேல் இருப்பது என பொருள். ஆனால் ‘பொன்மணித்தட்டாரின் இதயத்தில்’ என்பதன் பொருள் மட்டும் விளங்கவில்லை அரசே என கூறினார்.

இதையடுத்து பொன்மணித் தட்டார் என்பது பெயராக தெரிகிறது என்பதால், இந்த பெயரில் இருப்பவரைத் தேடி இங்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். அரண்மனையிலிருந்து பலரும் பல இடங்களில் தேடினர். கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து, பொன்மணித் தட்டார் யார் என அறிந்தனர்.

அரசனின் கட்டளையை கூறி அழைத்து வர சொன்ன சேதியை கூறினர்.

பொன்மணித் தட்டார், நானோ எளியவன், எனக்கு அரசனிடம் ஆக வேண்டியது எதுவும் இல்லை. அதனால் அவர் வர மறுத்தார். அதோடு அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் அளவிற்கு என் உடலில் வலிமை இல்லை, என்னிடம் கோணி வஸ்திரம் மட்டும் தான் உள்ளது என கூறினார்.

தமிழன் கட்டிய உலகிலேயே மிகப்பெரிய கோவில்... அதுல இத்தன மர்மங்கள் ஒளிஞ்சிருக்கா?

இதைக் கேட்ட அரசன் தன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரை காண வந்தனர்.
பொன்மணித் தட்டாரை வணங்கி இறைவனின் அசரீரி குறித்து கூறி தன் சந்தேகத்தை தெளிவுபடுத்த கேட்டார்.

அப்போது அரசனிடம் ஆலயத்திற்கு வட கிழக்கு திசையில் ஒரு குளம் வெட்டி, அதன் நடுவில் ஒரு சிறு சிவன் கோயில் அமைத்து, அங்கிருந்து பார்த்தால், பிரகதீஸ்வரர் ஆலையம் தெரியுமாறு அமைக்க கோரினான்.

அப்படி செய்தால் அதன் எட்டாவது நாளில் உனக்கு இறைவனின் காட்சி கிடைக்கும் என்றார்.

சிவகங்கை குளம்:
அப்படி அமையப் பெற்றது தான் தஞ்சை பெரிய கோயில் அருகில் இருக்கும் சிவகங்கை குளம் கட்டிய எட்டாவது நாளில் குளத்துக்கு நடுவில் இருக்கும் ஆலயத்திற்கு பொன்மணித்தட்டாரை அழைத்துச் சென்றார்.

சிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்?... எங்கே எறிந்தார்?...

அப்போது குளம் முழுவதும் நீரால் நிரம்பியிருந்தது. அரசன் ஆலயத்திற்கு செல்ல படகு உள்ளதென கூற, பொன்மணித்தட்டார் அந்த ஆலயத்திற்கு படகில் செல்லாமல் தண்ணீரிலேயே நடந்து சென்று கோயிலினுள் அமர்ந்து அவரின் இதயத்தில் இறைவனின் காட்சியை அனைவருக்கும் காண்பித்து அருள் நல்கினார். பின்னர் அவர் ஒளி வடிவமாகி தஞ்சை கோயிலின் கலசத்தில் சென்று கலந்தார் என கூறப்படுகிறது.

முதல் அபிஷேகம்:

அப்படி இறைவனை காட்டி அருள்பாலித்த அந்த சிவங்கை தீர்த்தத்தில் அமைந்துள்ள இறைவனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் மூலவருக்கு அபிஷேகம் நடைப்பெறுகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வை “விஸ்வகர்ம பக்தோபாக்கியானம்” என்ற பழைய நூலிலும். ‘பொன்மணித்தட்டார் சரித்திரம்’ என்னும் நூலிலும், ‘படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்’ என்ற நூலிலும் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்