ஆப்நகரம்

சோமவார தேய்பிறை சஷ்டி விரத சிறப்புகளும், பலன்களும்

முருகா என்று ஒரு முறை அழைத்தால் வந்த வினைகளும், வரவிருக்கும் துன்பங்களும் ஓடி விடும் என்பார்கள். முருகா என்ற சொல்லே மந்திரமாக கருதப்படுவதால், முருகா என்று மனதில் நினைத்தாலும் துன்பங்கள் அனைத்தும் மறைந்து போகும் என்பது நம்பிக்கை. திதிகளில் சஷ்டியும், நட்சத்தரிங்களில் கார்த்திகை நட்சத்திரமும் முருகனை வழிபட உகந்த நாட்களாகும். தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்பது ஐதீகம்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 13 Mar 2023, 10:45 am
மாசி மாதத்தின் திங்கட்கிழமையில் வரும் தேய்பிறை சஷ்டி கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். இந்த நாளில் முருகனுக்குரிய மந்திரங்களை சொல்வதும், முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதும் பல மடங்கு அதிகமான பலன்களை தரும்.
Samayam Tamil theipirai sashti viratham significance and benefits
சோமவார தேய்பிறை சஷ்டி விரத சிறப்புகளும், பலன்களும்


தேய்பிறை சஷ்டி விரதம் :

முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக சஷ்டி திதி சொல்லப்படுகிறது. பெளர்ணமியில் இருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி 6 என்ற எண் ஐஸ்வர்யத்தை தரக்கூடியதாக சொல்லப்படுகிறது. ஆறு என்ற எண்ணிற்கு உரிய கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரனின் அதிபதி மகாலட்சுமி ஆவார்.

​யாரெல்லாம் சஷ்டி விரதம் இருக்கலாம்?​

இருந்தாலும் ஆறு என்ற எண்ணும், சஷ்டி விரதமும் முருகனுக்குரியதாகவே கருதப்படுகிறது. இதற்கு காரணம் முருகா என்ற சொல்லுக்குள் மூப்பெரும் தேவர்களும் ஐக்கியம் என்பதனால் முருகப் பெருமானுக்குரிய நாளாக சஷ்டி கருதப்படுகிறது. பொதுவாக குழந்தை பேறு இல்லாதவர்கள் தான் சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் என்ற கருத்து அனைவரிடமும் நிலவுகிறது. ஆனால் முருகப் பெருமானின் அருளை பெற வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருக்கலாம்.

அது மட்டுமின்றி திருமணம் நடைபெற வேண்டும், நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள், செல்வ வளம் சேர வேண்டும் என நினைப்பவர்கள், அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள், கடன் தொல்லை தீர வேண்டும் என நினைப்பவர்கள், வாழ்வில் ஏற்படும் தடைகள் விலக வேண்டும் என நினைப்பவர்களும் சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம். அதிலும் மார்ச் 13 ம் தேதி மாசி மாத தேய்பிறை சஷ்டியானது திங்கட்கிழமையில் வருவதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.

மாசி பஞ்சமியில் சொல்ல வேண்டிய வாராகி அனுகிரக அஷ்டகம்

​மோசவார தேய்பிறை சஷ்டி விரத முறை :​

மோசவாரம் என்பது சிவ பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாகும். ஆனால் முருகப் பெருமான் சிவபெருமானின் அம்சமாகவும் விளங்குவதால் மிகவும் சிறப்பு வாய்ப்பு இந்த நாளில் முருகனை நினைத்து வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

மாதந்தோறும் வரும் சஷ்டி விரதம் கடைபிடிக்க விரும்புபவர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் முருகப் பெருமானின் படத்திற்கு மலர்கள் சூட்டி, தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். காலையில் முதல் உணவாக ஆறு மிளகையும், ஆறு கை அளவிற்கு தண்ணீரும் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருந்து முருகனை வழிபட வேண்டும். மாலையில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்யலாம்.

முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவினை மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். நாள் முழுவதும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் உள்ளிட்ட முருகன் மந்திரங்களை பாடி துதிக்க வேண்டும். நாள் முழுவதும் முருக சிந்தனையில், ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும். இவ்வாறு விரதம் இருந்தால் முருகனின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

நான்கு பேர் நான்கு விதமாக சொல்வார்கள் : யார் அந்த நான்கு பேர்?

​சொல்ல வேண்டிய மந்திரங்கள் :​

ஆறு எழுந்து மந்திரம் - சரவண பவ
ஐந்து எழுந்து மந்திரம் - ஆறுமுகம்
நான்கெழுத்து மந்திரம் - கந்தன்
மூன்றெழுத்து மந்திரம் - முருகா
இரண்டெழுத்து மந்திரம் - வேல்
ஓரெழுத்து மந்திரம் - ஓம்

சுதர்சன மகா மந்திரத்தின் மகிமையும், அதை சொல்லும் முறையும்

முருகன் மந்திரம் :

மனதில் பயம், பதற்ற உணர்வு உள்ளவர்கள், பயம் நீங்கி தைரியம் பிறக்க சஷ்டி நாளில் மட்டுமின்றி தினமும் வேல் காயத்ரி மந்திரத்தை நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் பயம் நீங்குவதுடன், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

வேல் காயத்ரி மந்திரம் :

ஓம் ஜ்வலா ஜ்வாலாய வித்மஹே
கோடி சூர்ய பிரகாசாய தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்