சாய்பாபாவின் அவதாரங்கள்
சாய்பாபாவிற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் பலரும் சாய்பாபா மீது அதீத நம்பிக்கை வைத்து, பக்தி செலுத்தி வருகின்றனர். ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, தெய்வீக சக்திகளை கொண்டிருந்தாலும் சாய்பாபாவை தெய்வீக தன்மை வாய்ந்த மனிதராக மட்டுமே அவரின் பக்தர்கள் பார்க்கின்றனர். பல பக்தர்களுக்கு மனித உருவிலேயே சாய்பாபா காட்சி அளித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
சாய்பாபாவை சிவ பெருமானின் அம்சமாகவும், தத்தாத்ரேயரின் வடிவமாகவும் அவரின் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். சாய்பாபா, மனித உருவில் சிவ பெருமான் எடுத்த அவதாரமாக பலர் கருதுகின்றனர். சாய்பாபா தனது மூன்று அவதாரங்களில் ஏற்கனவே இரண்டு அவதாரங்களை எடுத்து விட்டதாகவும், தனது மூன்றாவது அவதாரத்தை விரைவில் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தான் தனது மூன்றாவது அவதாரத்தை எங்கு எடுக்க உள்ளார் என்பதை சத்ய சாய்பாபா ஏற்கனவே தனது பக்தர்களிடம் கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.
மூன்று அவதாரங்கள்
ஷீரடி சாய்பாபா
சாய்பாபாவின் முதல் அவதாரம் தான் ஷீரடி சாய்பாபா. இவர் மகாராஷ்டிராவின் ஷீரடியில் கோவில் கொண்டிருந்தாலும், பக்தர்கள் அமைத்திருக்கும் கோவில்கள் மற்றும் மசூதிகளில் அருவமாக இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். 1918 ம் ஆண்டு ஷீரடி சாய்பாபா, மனித உடலை நீத்தார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சிறுவன் உருவில் தான் மீண்டும் வருவேன் என அவர் தனது பக்தர்களிடம் தெரிவித்தார். இருந்தாலும் அவரின் முதல் அவதாரமான ஷீரடிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபட்டு, பாபாவின் ஆசியை பெற்று வருகின்றனர்.
திருப்பதிக்கு அடுத்தபடியாக ஆண்டு முழுவதும் அதிகமான பக்தர்கள் சென்று வழிபடும் கோவிலாக ஷீரடி இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைக்கிறது.
திருவெம்பாவை பதிகம் 02 - பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்
இரண்டாவது அவதாரம்
சத்ய சாய்பாபா
பாபாவின் இரண்டாவது அவதாரம் சத்ய சாய்பாபா ஆகும். ஷீரடி சாய்பாபா ஜீவ சமாதி அடைந்த பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து சத்ய சாய்பாபாவின் அவதாரம் ஆந்திர மாநிலம் புட்டபர்தியில் நிகழ்ந்தது. சத்யநாராயணன் என்ற பெயரில் வாழ்ந்து வந்த அவர், தனது 13 வது வயதில் தான் ஷீரடி சாய்பாபாவின் அவதாரம் என்பதை உணர்ந்தார். அவரின் அற்புதங்களை காண ஏராளமான பக்தர்கள் குவிய துவங்கினர். மற்றவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காகவும் மனித குலத்திற்கு சேவை செய்வதற்காகவும் தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். சத்ய சாய்பாபா 2011 ம் ஆண்டு தனது மனித உடலை விட்டு நீங்கினார். தனது மனித உடலை விட்டு நீங்குவதற்கு முன் தனது தீர்க்க தரிசனத்தால், தான் பிரேம சாய்பாபாவாக மீண்டும் பிறக்க உள்ளதாக தனது பக்தர்களுக்கு தெரிவித்தார்.
திருப்பாவை பாடல் 02 - வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவை
அடுத்த அவதாரம் எப்போது?
பிரேம சாய்பாபா
சாய்பாபாவின் மூன்றாவது மற்றும் கடைசி அவதாரம் பிரேம சாய் பாபா என்ற பெயரில் நிகழ உள்ளது. சத்ய சாய்பாபா அளித்த தீர்க்க தரிசன அருளுரையில், தான் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் பிரேம சாய்பாபாவாக அவதரிக்க உள்ளதாக கூறி இருந்தார். குழந்தை பருவத்தில் இருக்கும் போதே உலகம் தன்னை அறிய துவங்கும் என்றும், மீண்டும் முதிர்ச்சி அடைந்த மனிதனாக தான் காட்சி தருவேன் என தெரிவித்திருந்தார்.
ஆவலாக காத்திருக்கும் பக்தர்கள்
பிரேம சாய் பாபாவின் அவதாரம் 2023 அல்லது 2025 ல் நிகழ உள்ளதாக பக்தர்கள் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம், பிரேம சாய்பாபாவின் அவதாரம் 2019 - 2021 காலங்களிலேயே நிகழ்ந்து விட்டதாகவும், விரைவில் அவர் உலகிற்கு தன்னை வெளிப்படுத்துவார் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இருந்தாலும் சாய் பக்தர்கள், அவரின் கடைசி அவதாரம் எப்படி இருக்கும். கலியுகத்தில் அவரின் அவதாரத்தை காண ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
சாய்பாபாவின் அவதாரங்களில் ஷீரடி சாய் பாபா, சிவ பெருமானின் அம்சம் என்றும், சத்ய சாய்பாபா சிவசக்தி அம்சம் என்றும், இனி எடுக்கப்பட உள்ள பிரேம சாய்பாபா அவதாரம் சக்தியின் அம்சம் என்றும் சொல்லப்படுகிறது.