ஆப்நகரம்

மார்கழி திருவெம்பாவை பாசுரம் 06 : மானே நீ நென்னலை நாளை

மார்கழியில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களை பாடி சிவபெருமானை வழிபடுவது சைவர்களின் பண்பாடாக மட்டுமின்றி, தமிழர்களின் பண்பாடாக மட்டுமின்றி மாறி போய் உள்ளது. கல்லான மனதினையும் உருக வைக்கும் சொற்களைக் கொண்டது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் என்பார்கள். அந்த திருவாசகத்திற்கே தலையாயது என போற்றப்படுவது திருவெம்பாவை பாடல்கள். இந்த 20 பாடல்களும் அனைவரின் மனதிலும் பக்தியை ஊற்றெடுக்க செய்யக் கூடியன. சிவ பெருமான் மீது அனைவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியன.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 21 Dec 2023, 6:15 pm
உலக ஆசைகளிலும், மும்மலங்களிலும் உளன்று கிடக்கும் மனித குலத்தை பக்குவப்படுத்தி, பக்தி செய்ய வைப்பது திருவெம்பாவை பாடல்களாகும். இறைவனின் அருளை பெற வாருங்கள் என உலக உயிர்களை மட்டுமல்ல, அடியார்களுக்கும், உலகத்தவர்களுக்கும் அருள் செய்ய எழுந்து வர வேண்டும் என சிவ பெருமானையும் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகிறார் மாணிக்கவாசகர்.
Samayam Tamil eesan


சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

திருவெம்பாவை பதிகம் 06 :

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள் :

மான் போன்ற கண்களை உடைய பெண்ணே, நாளை நானே வந்து உங்கள் அனைவரையும் எழுப்புகிறேன் என கொஞ்சமும் கூச்சமின்றி சொன்னாயே. அந்த வார்த்தைகள் போன திசை தெரியாமல் இன்னமும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாரே. இது போல் பலமுறை, பல விஷயங்களை நீ கூறி விட்டாய். போனதெல்லாம் போகட்டும். விட்டு விடு. இப்போது நான் சொல்வதையாவது கொஞ்சம் காது கொடுத்து கேள் என ஒரு தோழி, வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு தோழியை பார்த்து கேலியாக கூறுகிறாள்.

திருப்பதி வரிசை முறையை சபரிமலையிலும் கொண்டு வர திட்டம்

அவள் மேலும் கூறுகையில், வானவர்களும், பூவுலகில் இருப்பவர்களும் எளிதில் அறிந்து விட முடியாத சிவ பெருமான், தானே வந்து அருள் செய்வதற்காக நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவரை தரிசனம் செய்ய வேண்டும் என அவரது மலரடிகளை போற்றி நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ இன்னமும் கதவை திறக்காமல் உள்ளாயே. வந்து கதவினை திற. வாசல் கதவினை தான் திறக்கவில்லை என்றால், உனது வாயையும் திறக்காமல் இருக்கின்றாயே. உலகையே காத்தருளும் கருணை கடலாகிய அந்த எம்பெருமானை நாங்கள் போற்றி பாடுவதை கேட்டும் உன் மனம் உருகவில்லையா?

நீ அவனை நினைக்காமல் தூங்கிக் கொண்டிருந்தாலும், எங்களுக்கு மட்டுமல்ல உனக்கும் அருள் செய்ய அவன் காத்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவனை காண வா. எங்களுக்கும், உலகில் உள்ள மற்றவர்களுக்கும் அருள்புரியக் கூடிய கருணை வடிவான அந்த இறைவனை வாயாற பாட எழுந்து வா பெண்ணே என்கிறாள்.

வைகுண்ட ஏகாதசி 2023: விழா தோன்றிய கதையும், ஸ்ரீரங்கம் கோவில் உற்சவங்களும்

விளக்கம் :

நாம் நினைத்தாலும், நினைக்காமல் போனாலும், இறைவனை வணங்கி பக்தி செய்து போற்றி துதித்தாலும், அவர் மீது கோபப்பட்டு திட்டினாலும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சரிசமமாக, கொஞ்சமும் பாரபட்சம் பாராமல் தனது அருளை வழங்குவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறாள். ஆனால் நாம் தான் அதை புரிந்து கொள்ளாமல் மகிழ்ச்சி வந்தால் இறைவனை போற்றியும், துன்பம் வரும் போது அவரை திட்டியும் தீர்க்கிறோம். அதிகமான மகிழ்ச்சி வரும் போது சிலர் கடவுளையே மறந்து விடுகிறார்கள். அதுவே துன்பம் வரும் போது இறைவனுக்கு நம் மீது கருணையே இல்லை என ஆதங்கப்படுகிறோம். ஆனால் இறைவனின் குணம் அதுஅல்ல. இறைவனின் அருளை முழுவதுமாக பெற வேண்டுமானால் அவரை நோக்கி நம்முடைய மனம் செல்ல வேண்டும். எங்கும், எதிலும் நிறைந்த பரம்பொருள் ஒருவனே என்பதை உணர வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 06 :

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்துறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வாயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள் :

குடும்பம், பாசம், உறவுகள் போன்ற பந்தத்தை மறந்து உனது அருள் என்னும் பெரும் கருணையை உள்ளத்தால் உணர்ந்த அடியவர்கள் உன்னை காண வந்திருக்கிறார்கள். கண்ணுக்கு மை பூசு அழகுப்படுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்களும் தங்களின் அழகு சார்ந்த நாட்டத்தை விடுத்து, மானுட இயல்பிற்கு மாறி உன்னை வணங்கி நிற்கிறார்கள். பார்வதியின் தலைவனே! சொல்லில் அடங்காத சிறப்புடைய உனது தாமரை போன்ற திருப்பாதங்களை கண்டு தரிசிக்க வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். குளுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வாழும் சிவ பெருமானே! இந்த பிறவி என்னும் பந்தத்தை அறுத்து, இனி பிறாவாத நிலையை தந்து முக்தியை தந்து எங்களை ஆட்கொள்வதற்காக தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வாய்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்