ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையானை இப்படி அழைத்தால் தான் பிடிக்கும்!

திருப்பதி ஏழுமலையானை கோவிந்தா என்ற பெயரை சொல்லி அழைத்தால் தான் மிகவும் பிடிக்குமாம். அது ஏன் என்பதை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 4 Aug 2020, 2:45 pm
உலகத்தில் பணக்கார கடவுளாக, பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிக்கக்கூடியவர் திருப்பதி ஏழுமலையான்.
Samayam Tamil Tirumala Tirupati Balaji Temple
Govinda Name Is Very Like By Tirumala Tirupati Balaji In Tamil


பொதுவாக எம்பெருமாளுக்கு நாராயணா என்று அழைத்தால் மிகவும் இஷ்டம். ஆனால் ஏழுமலையானுக்கு நாராயணா என அழைத்தால் அதிகம் சந்தோசப்பட மாட்டாராம். அதுமட்டுமல்லாமல் அவரின் சொந்த பெயரான வெங்கடாஜலபதி, சீனிவாசன் என்ற பெயர்கள் சொல்லி அழைப்பதில் கூட பெரிய விருப்பம் கிடையாது.
undefinedundefinedதிருப்பதி வெங்கடாஜலபதிக்கே குல தெய்வம் யார் தெரியுமா?undefined
ஆனால் அவருக்கு மிகவும் பிடித்த ‘கோவிந்தா’ என்ற பெயர் சொல்லி கூப்பிட்டால், கூப்பிட்ட குரலுக்கு திரும்பி பார்ப்பாராம்.
undefinedகாரணம் அவர் பூலோகத்தில் அவதரித்திருந்த போது, அவர் ஆயர்களோடு மாடு மேய்க்கச் சென்றார். அப்போது ஏழுமலையானை ‘கோவிந்தா’ என ஆயர்கள் அழைத்தனர்.

நவகிரகங்களும் அடங்கியது தான் திருப்பதி தரிசனம்... திருப்பம் ஏற்படுவதும் இதனால் தான்!

அதுவே அவருக்கு பிடித்த பெயரானது. ஏனென்றால் பெருமாள் மாடு மேய்க்கும் போது மிக எளிமையாக இருந்தார். அதோடு எளிமையானவர்களால் இந்த நாமத்தால் அழைக்கப்பட்டதால் மிகவும் விருப்பமான பெயரானது. இதனால் தான் திருமலை திருப்பதியில் எம்பெருமானை ‘கோவிந்தா’ என்ற நாமத்தை சொல்லி பக்தர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

பிரமிக்க வைக்கும் அதிசயத்துடன் இருக்கும் திருப்பதி பெருமாளின் சிலை!

அதனால் திருப்பதி முழுவதும் கோவிந்தா நாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான பெருமாள் கோயில்களில் பஜனைகளில் ‘கோவிந்தா’ நாமம் தான் சங்கீர்த்தனமக சொல்லி வருகின்றனர்.

எளியோருக்கு பிடித்த பெயர் என்பதால் கோவிந்தா என்ற நாமமே எம்பெருமானுக்கு மிக உகந்த பெயரானது.
கோவிந்த நாமசங்கீர்த்தனம்
கோவிந்தா... கோவிந்தா...

அடுத்த செய்தி

டிரெண்டிங்