ஆப்நகரம்

நினைத்ததை நடத்தி வைக்கும் விநாயகர் அகவல்

எந்த காரியத்தை துவங்கினாலும் விநாயகரை வழிபட்ட பிறகே துவங்க வேண்டும் என்பது நியதி. விநாயகர் வழிபாட்டுடன் துவங்கினால் அந்த காரியம் எந்த விதமான தடையும் இல்லாமல் நடப்பதுடன், இறுதியில் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. எந்த தெய்வத்திற்கு உரிய ஸ்தோத்திர பாடல்களை பாட துவங்குவதற்கு முன்பும் விநாயகர் காப்புடனேயே துவங்குகிறோம்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 10 Jan 2023, 11:07 am
தெய்வங்களுக்கு எல்லாம் முதலானவர் என்பதனால் விநாயகருக்கே அனைத்திலும் முதலிடம். சாணம், மஞ்சள், சந்தனம் என எந்த பொருளில் விநாயகரை பிடித்து வைத்து வழிபட்டாலும், அந்த பொருளில் எழுந்தருளி அருள் செய்யக் கூடிய தெய்வமாக விநாயகர் உள்ளார். விநாயகரின் அருளை பரிபூரணமாக பெற்ற ஒளவையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகருக்கு உரிய பாடல்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது.
Samayam Tamil vinayagar agaval powerful mantra for lord ganesh worship
நினைத்ததை நடத்தி வைக்கும் விநாயகர் அகவல்


ஒளவையார் தந்த விநாயகர் அகவல்

விநாயகரின் அருளைப் பெறுவதற்காக ஒளவையார் அருளிய பாடல் தான் விநாயகர் அகவல். அகவல் என்றால் தமிழில் அழைத்தல் என்று பொருள். விநாயகரை அழைத்து, அவரின் புகழினை பாடி, அவரின் அருளைப் பெறுவதற்காகப் பாடப்பட்ட பாடல். எளிய தமிழில் எளிதில் அர்த்தம் புரியும் வகையில் இந்த பாடலின் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த இந்த விநாயகர் அகவலை தினமும் பாராயணம் செய்வது எல்லா விதமான நன்மைகளையும் பெற்றுத் தரும். முடியாதவர்கள் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, வெள்ளிக்கிழமை போன்ற விநாயகருக்கு உரிய முக்கிய வழிபாட்டு நாட்களில் மட்டுமாவது பாராயணம் செய்வது அதிக பலனை பெற்றுத் தரும்.

இந்த ஆண்டின் முதல் சங்கடஹர சதுர்த்தி : எப்படி வழிபட்டால் பலன் கிடைக்கும் ?

​விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

தை அமாவாசை 2023 எப்போது ? எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

வினை அகற்றும் விநாயகர்

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தளில் புகுந்து


குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திரமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

நடராஜரின் அருளைப் பெற்று தரும் நடராஜர் பத்து பாடல்

கணபதி துதி

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்


குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்


புரியட்ட காயம் புயப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமம் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தித்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அருள்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே !

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்