ஆப்நகரம்

தினமும் கோயிலுக்கு செல்வதால் இத்தனை பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

ஒருவர் தனக்கு விருப்பமான இறைவனை நினைத்து, அவரை வணங்க தினமும் கோயிலுக்கு சென்று வருவதால் பல நன்மைகள் ஏற்படும். கோயிலுக்கு தினமும் சென்று வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 10 Jul 2020, 4:46 pm
கோயிலுக்கு செல்வதால் நம் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி, நிம்மதி ஏற்படுவது வழக்கம்.கோயில் என்பது வெறும் இறை வழிபாடு மட்டும் என்பதை தாண்டி அதில் பல அறிவியல் காரணங்களும் நிறைந்துள்ளன.
Samayam Tamil Lord Aayyappa Sabarimala
Lord Aayyappa Sabarimala


கோயிலுக்கு தொடர்ந்து செல்வதால் பல நன்மைகள் நம் மனம் மற்றும் உடல் ரீதியாக ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் நமக்கு விருப்பமான கோயில்களுக்கு சென்றால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை இங்கு பார்ப்போம்...

  • இந்த ஊரில் இறந்தால் மட்டும் மறுபிறப்பே கிடையாதாம்... சிவனே காதில் வந்து நமசிவாய சொல்லி முக்தி தருகிறாராம்...
3 முறை தொடர்ந்து கோயிலுக்கு செல்வதால் மும்மூர்த்திகளான படைக்கும் கடவுள் பிரம்மன், காக்கும் கடவுள் மகா விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

5 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் உடலில் இருக்கும் அனைத்து வியாதிகளும் நீங்கும்.

7 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் திருமணம் ஆகதவர்களுக்கு விரைவாக வரன் கை கூடி வரும்.

11 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் நம்முடைய உடலும் உள்ளமும் தூய்மை அடையும்

13 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் எந்த காரியத்தை நினைத்து வழிபடுகிறோமோ அந்த காரியம் கைகூடும்.

சபரிமலை என்பதில் சபரி என்பதே பெண்தானாம்... ஆனா பெண்களுக்கு நோ என்ட்ரி... யார் அந்த சபரிங்கிற பெண்...

21 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் குழந்தை பேறு நிச்சயமாக கிடைக்கும்.

33 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு செல்வதால் ஒரு சிவ ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்த பலன் கிடைக்கும்.

77 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு செல்வதால் ஒரு சத்ர யாகம் செய்த பலன் அடையலாம்.

  • சிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்?... எங்கே எறிந்தார்?...
108 நாட்கள் தொடர்ச்சியாக கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி வருவதால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் பெறலாம்.

ஒருவர் 1008 நாட்கள் தினமும் கோயிலுக்கு சென்று வருபவர் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.

இது ஒருபுறம் இருக்க ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வருபவருக்கு இந்த உலகில் கிடைக்காத வஸ்து என்று எதுவும் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்