ஆப்நகரம்

இந்து தர்மம் உலகில் ஆழமான பாரம்பரியம் கொண்டதா?... உண்மை என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்...

இந்து தர்மம் தான் உலகில் மிக ஆழமான பாரம்பரியம் கொண்டதை என்பதை உணர்த்தும் சில தத்துவார்த்த விஷயங்களைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

Samayam Tamil 12 Nov 2019, 7:20 pm
இந்து தர்மம் தான் உலகில் மிக ஆழமான பாரம்பரியம் கொண்டதை என்பதை உணர்த்தும் சில தத்துவார்த்த விஷயங்களைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
Samayam Tamil why hindu dharma is the worlds most profound philosophical tradition in tamil
இந்து தர்மம் உலகில் ஆழமான பாரம்பரியம் கொண்டதா?... உண்மை என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்...


பழமையான மரபு

இந்தியா என்றாலே கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு பேர் போன இடம். ஆன்மீகம், விஞ்ஞானம் மற்றும் உளவியல் என்று எதிலும் சளைத்தவர்கள் இல்லை இந்தியர்கள். இந்து மதம் தான் உலகின் பழமையான மதங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. நவீன மனதர்களுக்கோ, மேற்கத்திய மனிதர்களோ இதைப் பற்றி புரிந்து கொள்வது கடினம். இந்து மதத்தின் வேறுபட்ட தன்மையும் பழக்க வழக்கங்களும் மற்ற மதத்தினரைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் இதைப் பற்றி விவாதிக்கவும் செய்துள்ளது.


ஆனால் இந்த விவாதங்கள் எல்லாம் இந்து மதத்தின் வெளிப்புற தோற்றத்தை வைத்து மட்டுமே பேசுகின்றனர். இந்து தர்மம் கூறும் யோகா, வேதாந்தங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் இதன் ஆழமான பதில்கள் ஒரு சிலருக்கே தெரிந்து இருக்கின்றன. இதன் சாரம் இன்றளவும் பலருக்கும் தெரியாமலே இருக்கிறது


இந்து தர்மம் உலகின் பழமையான மற்றும் விரிவான தத்துவ மரபுகளைக் கொண்டுள்ளது. இது ஒவ்வொருவருக்கும் சுய-உணர்தல் மற்றும் கடவுள்-உணர்தல் ஆகியவற்றின் மூலம் உயர்ந்த ஆன்மீகத் தத்துவங்களை வலியுறுத்துகிறது. இந்து மதம் இந்தியாவில் மட்டுமல்ல, கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் கூட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனவே இதை வெறும் இந்து தர்மம் என்று அழைக்காமல் சனாதன தர்மம் என்று அழைப்பதே பொருத்தமானது என்கின்றனர் தத்துவவியலாளர்கள். "அறிவின் நித்திய வழி" என்று கூட மொழிபெயர்க்கலாம். ஏனெனில் தர்மம் என்ற சொல் ஞானத்தையும், பயன்பாட்டையும் குறிக்கிறது.

இப்படிப்பட்ட அறிவார்ந்த இந்து மதத்தை அதனுள் பொதிந்துள்ளன விஞ்ஞானத்தை நாம் ஆராய வேண்டும். உள் தேடலை ஊக்குவிக்க வேண்டும். வெறும் வெளிப்புற அல்லது தனிப்பட்ட நம்பிக்கையாக அல்ல.

​சுய அறிவின் மூலம்

உபநிடதங்கள் போன்ற இந்து தத்துவ நூல்கள் பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்கர்களின் நூல்களை விட பழமையானவை மற்றும் மேற்கத்திய தத்துவாக்கத்திற்கு முந்தியவை என்று கூறப்படுகிறது.

இந்த இந்து நூல்கள் உலகளாவிய அண்ட நுண்ணறிவை வழங்குவதால் அவை பல விஷயங்களில் ஆழமானவையாக உள்ளது. ஆனால் இதை மேற்கத்திய சிந்தனையின் வாயிலாக புரிந்து கொள்வது மட்டும் கடினமாக உள்ளது.

​மனதை ஒருமுகப்படுததுதல்

வெறும் தத்துவ பேச்சு, மத நம்பிக்கை என்று மட்டும் இல்லாமல் வாழ்க்கையின் மர்மங்களுக்குள் அழைத்துச் செல்லக் கூடிய ஒரு ஆழமான மதம். மனதை ஒருமுகப்படுத்தும் தியானத்தை அவை ஊக்குவிக்கின்றன.

அரிஸ்டாட்டில், பிளேட்டோ மற்றும் புளொட்டினஸ் போன்ற கிரேக்க தத்துவஞானிகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் தத்துவ மற்றும் இறையியல் நூல்களை விட உபநிடதங்கள் மிகவும் பழமையானவை மற்றும் வேறுபட்டவை. இருப்பினும் இவைகள் நிராகரிப்பட்டன.

தூய்மையும் அறிவும்

மேற்கத்திய மதங்கள் கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் தங்கள் அறிவியல், கணிதம், கலை, கட்டிடக்கலை மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்காக நம்பியிருந்ன. இதனால் மேற்கத்திய அறிவியலும், கலையும் மறுமலர்ச்சி பெற்றன. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை அவர்கள் நிறைய விஷயங்களை தூய்மையற்றதாக கருதினர்.

ஆனால் நமது இந்து மதம் தனித்து நின்று ஓங்கியது. ஆன்மீகம், ஆயுர்வேதம், வேத ஜோதிடம், வாஸ்து, இந்திய இசை, கோயில் கட்டடக் கலை, ஓவியம் என்று தனிப்பட்ட ஒரு அந்தஸ்தை இந்து மதம் நிலை நாட்டியது. நமது இந்து மதம் கலை, இசை, அறிவியல் இவற்றை ஒரு போதும் அசுத்தமானது என்று நிராகரிக்கவில்லை. யோகா செய்வதை வலியுறுத்தியது.

​வேத உபநிடதங்கள்

நமது உபநிடத நூல்கள் பண்டைய கிரேக்கர்களைப் போலவே சுய அறிவை வலியுறுத்துகின்றனர். ஆனால் உடல் மற்றும் மனம், கர்மா மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றைத் தாண்டிய சுய அறிவை பெற வேண்டும் என்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல எல்லா ஜீவ ராசிகளும் இந்த சுய அறிவை பெற்று வாழ்வதே சிறந்தது.

கிறிஸ்தவ தத்துவத்தில் நிகழும் பல இறையியல் விவாதங்கள் பழைய இந்து நூல்களில் காணப்படுகின்றன. பிரம்மா சூத்திரங்கள் கடவுள் என்பவர் இயற்கையானவர், அப்பாற்பட்டவர் என்பதை கூறுகிறது.

இந்து சிந்தனை ஒரு தூய்மையான சிந்தனை. அரிஸ்டாட்டில் போன்ற மேற்கத்திய சிந்தனைகள் இருந்தாலும் இந்து மதம் தான் வாழ்க்கையின் மிகவும் நடைமுறை பார்வையாக உள்ளது , அதுவே இறுதியில் அறிவியலின் நிழலாக மாறும்.

இந்த மாற்றம் உலகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்க்க உதவியது. இருப்பினும் பழமையான இந்து மரபுகள் படிப்படியாக அழிந்து வந்தன.

இந்தியாவின் தத்துவ மரபுகளை எப்படி மீட்டெடுப்பது

இந்து தர்மம் என்பது உருவ வழிபாடு, அடக்குமுறை சமூக பழக்கவழக்கங்கள் அல்லது மூடநம்பிக்கை நம்பிக்கைகள் ஆகியவற்றின் பழமையான அமைப்பு அல்ல. அதற்கு எதிரான பிரச்சாரங்கள் எல்லாம் கண்மூடித்தனமாக பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் சித்திகரிக்கப்படுகின்றன. அதை முதலில் நிறுத்த வேண்டும்.

இந்து மதத்தில் தான் மகத்தான ஆழமான அண்ட நுண்ணறிவுகள் பொதிந்துள்ளன. அண்ட அறிவியலையை விரிவுபடுத்துகிறது. யோகா தியானம் போன்ற பாதையை வழிகாட்டுகிறது.

இப்படி தர்ம மரபுகள், வேதாந்தம், யோகா, தியானம் போன்றவை இந்து மதத்தில் மட்டுமல்ல சமண, புத்த மதங்களில் கூட காணப்படுகிறது. இவை அண்ட யதார்த்தத்தை பற்றிய புரிதலை நம்மிடையே கொடுக்கிறது.

இந்த தியான அடிப்படையிலான தத்துவங்கள் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றே கூறலாம். எனவே இது ஒரு அர்த்தமுள்ள இந்து மதம் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம். நவீன உலகம் முன்னேற ஆழமான கருத்துக்களின் மையப் புள்ளி இந்து மதம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்