ஆப்நகரம்

சிவனும் ராகுவும்: சிவன் ஏன் தோல் உடை அணிந்திருக்கிறார் தெரியுமா?

ஹரியும் சிவனும் ஒன்னு என்பத உணர்த்தும் காரணங்களும், சிவனும் ராகுவின் அம்சங்கள் எப்படி இருக்கும். சிவ பெருமான் ஏன் தோல் உடை அணிந்துள்ளார் எனபதை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 19 Mar 2020, 6:44 pm
நவகிரகங்களின் அமைப்பு ஒருவருக்கு ஜாதகமாக அமைந்து அவரின் வாழ்க்கையை கணிக்கக் கூடிய அம்சமாக இருக்கின்றது. நவ கிரகங்களில் ராகு - கேது நிழல் கிரகமாக இருந்தாலும், அவற்றிற்கான அமைப்பிற்கும் மிக முக்கிய பங்கு உள்ளன.
Samayam Tamil shiva indiatimes


அதில் சிவ பெருமான் சூரியனின் அம்சமாக குறிப்பிடப்படுகிறார். அவர் அணிந்திருக்கக் கூடிய உடை ராகுவை குறிக்கும். அதாவது மிருகங்களின் தோலால் செய்யப்படும் ஆடைகள், பொருட்கள், உபகரணங்கள் அனைத்தும் ராகுவின் காரகனாக பார்க்கப்படுகிறது.

எங்கிருந்து வருகிறது நிழல்... சிவனின் நிழலா? - சாயா சோமேஸ்வரா கோயிலில் இருக்கும் அதிசயம் இதோ

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியகசிபுவை வதம் செய்தார். வதம் செய்த நரசிம்ம பெருமான் தன் சினம் தனிந்து அவரின் சிங்க அவதாரத்தின் நினைவாக சிவ பெருமான் அணிய தன் அவதார உடையை ஈசனுக்கு கொடுத்தார். அன்று முதல் முக்கண்ணன் தோல் ஆடையை உடுத்துகிறார்.

ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவர் வாயில் மண்ணு என முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.

ஈசனின் திருவிளையாடல் - இந்த ஊரில் இறப்பவர்களின் காது தூக்கியபடி இருக்குமாம்?
ராகுவும் சுபத்துவமும்:
ஒருவரின் ஜாதகத்தில் ராகு யோக அல்லது சுபத்துவம் பெற்றவராக இருப்பவர்கள், தோல் ஆடை அல்லது தோல் பை, பர்ஸ் பயன்படுத்தி வர அவர்களுக்கு ராகுவால் அனுக்கிரகம் கிடைக்கும்.

அதே சமயம் ஜாதகத்தில் ராகு அவயோகம் அல்லது அசுபத்துவம் பெற்றவராக இருப்பவர்கள், தோல் ஆடை, தோல் பை, பணம் வைக்க தோல் பர்ஸ் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் நன்மை ஏற்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்