ஆப்நகரம்

கோயிலுக்கு செல்லும் முன் ஏன் அசைவ உணவு சாப்பிடக்கூடாது, தவிர்க்க வேண்டும் தெரியுமா?

ஆலயத்திற்கு செல்லும் முன், அல்லது அன்றைய தினம் ஏன் நாம் அசைவ உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என்ற சூட்சுமத்தை தெரிந்து கொண்டு, இறை அருளைப் பெற்று பெருவாழ்வு வாழுங்கள்.

Samayam Tamil 3 Dec 2020, 6:20 pm
ஆலயம் என்பது புனிதமானது. அங்கு செல்வதற்கு முன் முன்னோர்கள் வகுத்துவைத்த சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதன் படி ஆலயத்துக்குச் செல்லும் முன் நாம் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து செல்ல வேண்டும் என்பது பொது விதி.
Samayam Tamil Temple Worship
Temple Worship


அதோடு கூறப்படும் முக்கிய விதி தான் கோயிலுக்கு செல்லும் முன் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என்ற விதி. ஒவ்வொரு வகை உணவு நம் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

அதாவது நாம் பொங்கல், தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் மந்தமாக இருப்பது போன்று உணர்வோம், அதுவே காரம் அதிகம் சாப்பாட்டில் எடுத்துக் கொண்டால் கோபம் அதிகம் வருவதை நாம் உணர்ந்திருப்போம்.

இதனால் நேர்மறை ஆற்றல் நாம் பெற முடியாமலும், மனதளவில் இறைவனை உற்சாகத்துடன் தரிசிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் கோயிலுக்கு சென்றாலும் அதன் நன்மையைப் பெறமுடியாத நிலை இருக்கும்.ஒருவேளை நாம் அசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அசைவ உணவை எடுத்துக் கொண்ட 4 மணி நேரத்திற்கு பின்னர், குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது தான் உகந்தது. அப்போது தான் கோயிலில் உள்ள சூட்சும நேர்மறை அதிர்வுகளை உணர முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்