ஆப்நகரம்

கஜேந்திரவரதர் கோயிலில் ஏகாதசி வழிபாடுகள், பூஜைகள்!

அத்தாளநல்லூர் ஸ்ரீகஜேந்திரவரதர் கோயிலில் புரட்டாசி வழிபாடு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

TOI Contributor 26 Sep 2016, 4:41 pm
அத்தாளநல்லூர் ஸ்ரீகஜேந்திரவரதர் கோயிலில் புரட்டாசி வழிபாடு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Samayam Tamil kajanthiravaradar aakaathesi fest
கஜேந்திரவரதர் கோயிலில் ஏகாதசி வழிபாடுகள், பூஜைகள்!


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது முக்கூடல். இங்கே, தாமிரபரணி ஆற்றிற்கு தென்புறத்தில் அமைந்துள்ளது அத்தாள நல்லூர். இந்த ஊரில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள்!

இந்த ஸ்தலம் கஜேந்திரருக்கு அதாவது யானைக்கு மோட்சம் கொடுத்த திருத்தலம். பிரசித்தி வாய்ந்த இந்த ஆலயத்தில் வருடம் தோறும் புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டுமின்றி, புரட்டாசி மாதம் முழுவதுமே சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில், பக்தர்கள் ஏராளமாக வந்து தரிசனம் செய்வார்கள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள பக்தர்கள் சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கும் அதிகமான அளவில் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை சேவித்தனர். அதுபோல் 2-வது வார சனிக்கிழமையிலும் காலை மற்றும் மாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள்.

இன்று திங்கட்கிழமையில், ஏகாதசி திதியை முன்னிட்டு, ஸ்ரீகஜேந்திர வரத பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்தார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்