ஆப்நகரம்

கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்.!

அறுபடை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

TNN 20 Oct 2017, 9:59 am
அறுபடை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
Samayam Tamil kanathasasti festival started today
கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்.!


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான, திருச்செந்தூர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 6 மணிக்கு மேல் ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து, யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

6-ம் நாள் விழாவான அக்டோபர் 25-ம் தேதி, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் முன்புள்ள கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் திருச்செந்தூரில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Kanathasasti festival started today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்