ஆப்நகரம்

காஞ்சி வரதர் கோயில் தேரோட்டம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, உற்சவர் வரதராஜ பெருமாள் தங்கப் பல்லக்கில் திங்கள்கிழமை வீதியுலா வந்தார். இதையடுத்து இன்று 25ம் தேதி திருத்தேரோட்ட வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

TOI Contributor 25 May 2016, 3:41 pm
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, உற்சவர் வரதராஜ பெருமாள் தங்கப் பல்லக்கில் திங்கள்கிழமை வீதியுலா வந்தார். இதையடுத்து இன்று 25ம் தேதி திருத்தேரோட்ட வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil kanchi varatharajar temple car fstival
காஞ்சி வரதர் கோயில் தேரோட்டம்!


திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் முதலான ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் இது. காஞ்சியில் உள்ள வைஷ்ணவ தலங்களில் மிகப் பிரமாண்டமான திருத்தலம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில் முக்கியமான திவ்விய தேசம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

இங்கே மூலவரின் திருநாமம் ஸ்ரீதேவநாத சுவாமி. உத்ஸவர் ஸ்ரீவரதராஜ பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீபெருந்தேவித் தாயார்.

ஹொய்சாள மன்னன் வீர பல்லாளன், காளிங்கராயன், பாண்டிய மன்னன், ஐந்தாம் சடையவர்மன் மற்றும் சேர, சோழ மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து உள்ளனர்.

தலம், தீர்த்தம், மூர்த்தம் எனப் பெருமைகள் கொண்ட காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசியில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் முக்கியத்துவம் வாய்ந்தது.

கோயில் பிரம்மோற்சவ விழா, கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் வரதராஜ பெருமாள் தங்கப் பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தேறியது. அன்று மாலையில் யாளி வாகனத்தில் வீதியுலா வந்த வரதரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குழுமினார்கள்.

இதையடுத்து மிக முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அழகிய தேரில் வரதரின் தரிசிக்கவும் வடம் பிடிக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள்.

நான்கு வீதிகளிலும் ஸ்ரீவரதர் ஒய்யாரமாக தேரில் வலம் வந்ததை ஏராளமான பக்தர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரிசித்தார்கள்.

தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்