ஆப்நகரம்

ஆத்தா! மாரியாத்தா! எங்க பொருளாதாரத்தை தூக்கிவிடுமா; ரூபாய் நோட்டுக்களால் வேண்டுதல்!

பொருளாதாரம் மேம்பட வேண்டி, ரூபாய் நோட்டுக்களால் அம்மனிடம் பிரார்த்தனை செய்தனர்.

Samayam Tamil 10 Feb 2018, 11:47 am
கரூர்: பொருளாதாரம் மேம்பட வேண்டி, ரூபாய் நோட்டுக்களால் அம்மனிடம் பிரார்த்தனை செய்தனர்.
Samayam Tamil karur mariyamman gets rupee notes decoration for economy growth
ஆத்தா! மாரியாத்தா! எங்க பொருளாதாரத்தை தூக்கிவிடுமா; ரூபாய் நோட்டுக்களால் வேண்டுதல்!


கரூர் மாவட்ட குளித்தலை அருகே சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இது சாதாரண மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பிரதான கோவிலாக திகழ்கிறது. இந்நிலையில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படக் கோரி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். அப்போது அம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.

மேலும் கருவறை முழுவதும் ரூபாய் நோட்டுக்களால் நிரப்பி இருந்தனர்.

இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பூஜையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராமங்கள் பங்கேற்று, விழாவை சிறப்பித்தனர்.

Karur Mariyamman gets rupee notes decoration for economy growth.

அடுத்த செய்தி

டிரெண்டிங்