ஆப்நகரம்

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 7ம் தேதி திருக்கல்யாண விழா!

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி தேதி தெய்வத் திருக்கல்யாண நாள் விழா விமரிசையாக நடைபெறுகிறது.

TOI Contributor 26 Jul 2016, 6:35 pm
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி தேதி தெய்வத் திருக்கல்யாண நாள் விழா விமரிசையாக நடைபெறுகிறது.
Samayam Tamil karur pasupatheeshwarar temple thirukalyana vizha
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 7ம் தேதி திருக்கல்யாண விழா!


கருவூர் மகா அபிஷேகக் குழுவின் 18ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்தத் திருமண விழாஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து புண்யாகம், அனுக்ஞை, மகா சங்கல்பம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

இதையடுத்து 6ம் தேதி காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, மூல மந்திர ஹஸ்த்ர மகா மிருத்யுஞ்சை மற்றும் தீபாராதனை, கடம் வலம் வருதல், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும், 7ம் தேதி காலை 10.30 முதல் 12 மணிக்குள் தெய்வத்திருமணம் நடைபெறுகிறது.

திருக்கல்யாணத்தின் போது நடைபெற உள்ள அமிர்த சஞ்சீ வினி என்ற மிருத்யுஞ்ச ஹோமம் ஆயுள் விருத்தி தரக்கூடியது. ஆயுள் தோஷம் இருந்தால் அதை நீக்கக்கூடியது.

இதையடுத்து மாலை 3 மணி முதல் 5 மணி வரை கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கலை,அறிவியல் கல்லூரியின் மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சி மற்றும் ஆன்மிக நடனம் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்