ஆப்நகரம்

மயிலாடுதுறையில் இன்று தொடங்குகிறது காவிரி மகாபுஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர விழா தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இன்று தொடங்குகிறது.

TNN 12 Sep 2017, 9:28 am
தமிழ்நாடு: 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர விழா தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இன்று தொடங்குகிறது.
Samayam Tamil kaveri maga pushkaram festival is starting today
மயிலாடுதுறையில் இன்று தொடங்குகிறது காவிரி மகாபுஷ்கர விழா


குருபகவான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கா, யமுனா போன்ற ஒவ்வொரு நதியிலும் புஷ்கரம் செய்வார். இந்த முறை காவிரி நதியில் துலாக்கட்டத்தில் புஷ்கரம் செய்கிறார். 144 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதியில் புஷ்கரம் செய்வதால், மகா புஷ்கர விழாவைக் கொண்டாட மயிலாடுதுறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்க இருக்கிறது. பின்னர் புஷ்கர யாகம் செய்யப்பட்டு, புனித நீர் துலாக்கட்ட நீர்த் தேக்கத்தில் சேர்க்கப்படவுள்ளது. அதன் பின்னர் புனித நீராடல் முறைப்படி தொடங்குகிறது.

மேலும் மயிலாடுதுறை புஷ்கர விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இன்று தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை விழா நடைபெற இருக்கிறது.

Kaveri maga pushkaram festival is starting today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்