ஆப்நகரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவம் துவங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நேற்று கோலகலமாக துவங்கியது.

Samayam Tamil 20 Jun 2018, 6:32 pm
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நேற்று கோலகலமாக துவங்கியது.
Samayam Tamil madurai temple


இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் நடராஜன் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில்,

‘தமிழ் மாதமான ஆனியில் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் வரையில் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய உற்சவம் வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று (20-ந் தேதி) இரவு முதல் ஆனி உத்திரம் தொடங்குகிறது.

நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவிலின் பழைய திருக் கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம் நடை பெறும். இரவு பஞ்சமூர்த்தி கள் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். நாளை அதிகாலை பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மனுக்கும், பிரதான கால்மாறி ஆடும் நடராஜர்- சிவகாமி அம்மனுக்கும் கோவிலின் 6 கால் பீடத்தில் பாலாபிஷேகம் நடைபெறும்.

இதர 4 சபை நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலிப்பார்கள். திருவிழாவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் திரவிய பொருட்களை கோவில் உள்துறை அலுவலகத்தில் நாளை முதல் பக்தர்கள் வழங்கலாம்.

வருகிற 27-ந் தேதி அரு ளாளர் அருணகிரிநாதர் ஜெயந்தி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆவணி மூல வீதிகளில் அருணகிரிநாதர் புறப்பாடு நடைபெறும்.ஆனி மாத பவுர்ணமி அன்று (28-ந் தேதி) உச்சிகால வேலையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெறும்.

இந்த அபிஷேகத்திற்கு பின்னர் சித்திரை வீதிகளில் சுவாமி, குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளுவார். ஆனி ஊஞ்சல் உற்சவ திருநாள் தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை கோவில் சார்பிலோ, உபயதாரர் சார்பிலோ திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடத்த இயலாது’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்